புதன், 17 செப்டம்பர், 2025

தேயிலை வாழ்வின் தீராப் புலம்பல்

 


                 (அறுசீர் கலித்துறை – 10 செய்யுட்கள்)

  1. மழைதூறும் மேகங்கள் நெஞ்சில் விழுகின்ற
    கடுங்காற்று நேர்கள் கடலாகும் வாழ்வில்,
    கொழுந்தாகும் தேயிலை கொய்வோரின் பங்கும்
    உழைப்பாலே தங்கி உறைந்தது பூமி –
    விடியலே வருமோ இவர்க்கொரு நாளில்?

  2. மரச்செடி வீதியில் மார்பழிக்கும் கையை
    உதிரத்தில் தோய்ந்துகொள் உந்திகள் போல,
    கதவாகித் தள்ளிடும் காலங்களோடும்
    நடுநிசி தூக்கத்தில் நாணிகள் காண்பான்,
    பசுவாய்ப் பிழைக்கும் பழக்கமே யாமே.

  3. சுகமின்றி சாய்ந்தழி தோள்களில் வண்டி
    இழுத்திடும் பாரம் இருந்ததோ காதல்?
    வாடியும் பூக்கள் வறண்டுவீழ் கூழில்
    சாமானே ஆனது சாமீன் ஆசை,
    பரமனும் நோக்கி படர்ந்திடான் ஏன்?

  4. சுடுகாடு போல எரிகின்ற தொட்டில்
    உழந்தவர் பிள்ளைகள் உண்டியை நோக்க,
    சிரமங்கள் வேரான சின்னமாம் வாழ்க்கை,
    நெருப்போடு தள்ளிய நிலப்புழு போலும்,
    நரைகூந்தல் தேய்ந்ததும் நாடகம்தானே?

  5. மொழிக்கே இனிமை தந்தாளும் தமிழ்
    இழைக்கே அடிமை என்றாளோ யாரோ?
    எரிபொருள் போல எரிகின்ற நெஞ்சம்
    பரிகாசம் செய்த பசுங்கால நாடே,
    வெருட்டாதே மீண்டும் விடிகதிர் வேண்டும்.

  6. தேடாத பாசம்தான் தேய்ந்தது இன்று,
    நிலத்தேழை கண்ணீர் நிழலாக நின்று,
    மேடாகும் வானில் விழியாலே மட்டும்
    பதைப்பாகும் நினைவைப் பகிர்ந்திடும் யாரோ?
    கொடுப்போரே மாய்ந்து குழைந்தனர் தேவை.

  7. தாய்க்கொரு ஆசை – பிள்ளைக்கு கல்வி,
    வேளாண்மை இல்லை; விதை நனைந்து அழுதும்.
    தேயிலைப் பையனே தேர்ச்சி பெறினும்,
    ஒருநாளும் நகரும் ஒளிகாட்டும் நேரம்?
    மரபாகும் வலியே மறக்குமோ பின்பு?

  8. கூலிக்கு வந்தும் கொதிக்கும் மதிப்பில்
    எழுப்பிய தேசம் இசைக்கவே இல்லை.
    முகமூடி போடுவோர் மொத்தமும் பேரில்,
    உரிமையை வாங்கும் உரவுகள் யாரே?
    தனிமையே நம்மைத் தழுவிடும் போது.

  9. நிலத்தில் விழுந்து நினைவில் இருந்தும்
    பயிரில் மலராத பரிதாப வாழ்வு.
    பணிக்கே பிறந்தோம் பண்பென்ன கேட்கும்
    குறும்பாய்த் தாழ்ந்தும் குயில்பாடும் நாள்
    ஒருநாளும் வரும் என்று உறுதி உண்டோ?

  10. இழிவிலும் அழிவிலும் இன்பமே தேடும்
    தேயிலைத் தொழிலாளர் தேசத்தின் முள்.
    கழுவாத பாவங்கள் கண்ணீரில் நனையும்,
    எரிகின்ற நெஞ்சத்தில் எழிலொளி தேடிப்
    பதைத்தாலும் வாழ்வைப் பரிசளிக்குமோ

            நன்றி
         அன்புடன்
          த.ரூபன்

வெள்ளி, 13 அக்டோபர், 2023

தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா-2023

 கடந்த 11.10.2023 ஆந் திகதியன்று தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்தின விழா அதிபர் திரு.ச.கமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக இப் பிரதேசத்தின் கல்வி வளமாகிய கல்குடா கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.க.ஜெயவதனன் அவர்கள் கலந்து  சிறப்பித்தார்.






நன்றி

-அன்புடன்-

கவிஞர்.த.ரூபன்

வெள்ளி, 17 டிசம்பர், 2021

உலகமே திரும்பிப் பார்




மண்ணில் மாந்தரைப்  படைத்த இறைவா.
பிறக்கும் போதே  என்னை
கருவில் அழித்திருக்கலாம்.
நான் என்ன பாவம் செய்தேன்
உலகமே! என்னை எள்ளி நகையாட

அரிய சிம்மாசனத்தில் நீ இருக்கிறாய்
அம்மா அப்பா செய்த பாவத்திற்கு
பாவப்பட்ட கைதியாய்-
வீதியோரம் சிறை வைக்காதே.

 

தாழ் போட்டுப் பூட்டிய  இரவு
கதிரவனின் ஒளி கண்டு
திரை  விலகுவது  போல.
என் வாழ்விலும்
ஒளி விளக்கு எப்போது?
இறைவா!......ஏக்கத்துடன்

மனம் விட்டு  என்
இதயத்தில் உள்ளதை
உயிர் வரியாய்த்  தருகிறேன்
தன்  நிறைவு  வளம் கொண்ட  நாடுகள்
 

மனித உதிரத்தைக் குடிக்க.
கந்தக  குண்டுகளை  பொதி  செய்ய
ஆயிரம் கோடிகள் செலவு
 
பூகோள  வையகத்தில்.
பூ ப்போல புன்னகைக்கும்
என்னைப்  போன்ற  அனாதைச்
சிறுவர்கள்  எத்தனை.
அவர்கள் வாழ்விலும்  இருளை  அகற்றி
பட்டினிச்சாவை  தடுத்திட
கோடிப்  பணத்தை  செலவிடுவாய்.

உலக நாடுகளே!.


அன்புடன்
கவிஞர் .ரூபன்.




செவ்வாய், 11 மே, 2021

வைகாசி மாத ஊற்று சஞ்சிகைக்கு உங்கள் படைப்புக்களை அனுப்புக.

 



வணக்கம்

உறவுகளே.

ஊற்று சஞ்சிகை சில மாதங்கள் இணைய வழி சஞ்சிகையாக வலம் வந்து பல ஆளுமை மிக்க எழுத்தாளர்களின் படைப்புடன்.
இம்மாதம் அச்சு வடிவில் பல்சுவை இதழாக ஆளுமைமிக்க எழுத்தாளர்களின் படைப்புக்ளுடன் ஒவ்வொரு மாதமும் வெளிவரும்.
படைப்புக்கள் அனுப்பும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் தங்களின் படைப்புக்களை விரைந்து அனுப்பவும்.மின்னஞ்சல் வாயிலாக.

குறைந்த செலவில்.விளம்பரம் செய்யலாம்.(கலர்.வெள்ளை.)வர்ணங்களில்.

நன்றி.
ஊற்று சஞ்சிகை ஆசிரியர்
எழுத்தாளர்.கவிஞர்.த.ரூபன்

வெள்ளி, 25 டிசம்பர், 2020

பருத்திக் காட்டுப் பெண்ணே




என் சிங்கார சிவப்பழகி-மாமன் வீட்டுக்கு
மாலையோடு சீர் வரிசையுடன் –செல்பவளே.
சேர்த்து வைத்த பொக்கிசமே.-செல்லமா
சேர்ந்து வாழ வைகலையே-செல்லமா.
 
நடையழகில் நான் மயங்கி-நாணமெல்லாம்
மெய் தவற விட்டெனடி-செல்லமா.
சேர்த்து வைத்த அத்தனையும்-சில்லறையாய்
சிதறுதடி உன் புன்னகை வதனமடி.
 
கால் கொலுசு போட்டுக்கிட்டு.
தள தளவென்று நீ காத வெளி –நடக்கையில்.
பின்னருகே  நான் வந்து பின்னலைத்தான்-இழுக்கையில்
முணுமுணுத்த உன் அலங்கல்-மெய்மறந்து போகு தடி
 
பருத்திக் காட்டுக்குள் –பஞ்செடுக்க –போறவளே!
பரிதவித்து மூச்சடைத்து –போனாயே.
மூன்று நாளும்  முன்னும் பின்னும் நான் இருந்தேன்.
உன் முழு முகமும் காணவில்லை.

-நன்றி-
-அன்புடன்-
-த.ரூபன் 

சனி, 13 ஜூன், 2020

மனங்களில் நிறைந்தவனே.

எண்ணக்கவியோடு ஏழைகளின் மனதோடு
நின்று உறவாடும் செந்தமிழ் புலவரே
சொந்த தமிழில் செந்தமிழ் பாடி
அகிலம் வாழும் தமிழர் மனங்களில்
நிறைந்த முழுமுதல் கவிஞரே.-நீ வாழ்க.

சில மணி நேரம் உன்னுடன் பழகிய காலங்கள்
என் வாழ்வின் இளவேனிக்காலங்கள்
இயல் இசை நாடகம் என்ற முக்கலையும்
வளர்க்கும் சங்கத் தமிழின் அவைச் சான்றோரே
உன் பேச்சு அகிலமெல்லாம்  இனிக்குதையா

அகவை நிறைவை ஆயிரம் உறவுகள் கூட்டி
அவனியில் வலம் வரும் உனக்கு
ஆயுள் முழுதும் அண்டவன் அருள் புரிவான்.
தமிழுக்காய் நீ வாழுகிறாய்
உன் புகழ் தரணி எங்கும் பூபாளம் பாடுதையா

ஆசானாய் கவிஞனாய் அவைபேச்சாளனாய்
ஏழைகளின் தோழனாய் மாந்தர்களின்
மனங்களில் நிறைந்தவனே.  
வாசு தேவன் நாமம் பெற்ற உன்னை.
அகவை நிறைவில் ஆயிரம் கவிஞர்களின்
வாழ்த்துக்கவிதையில் நனைய
இந்தச் சான்றோனும் வாழ்த்துகிறேன்.


நன்றி
அன்புடன்
த.ரூபன்

திங்கள், 23 செப்டம்பர், 2019

உதிரத்தில் வளர்ந்த மொழி



நற்தமிழே  நாவூறும் செந்தமிழே
நாம் கற்கும்  பைந்தமிழே
இந்தனைக்கும் நீ வாழ
தரணியிலே உன் புகழும்.
கண்மணிகள் பிறந்து  விட்டால்
கற்பனையாய்  தாலாட்டும்
நம் தமிழின் செந்தமிழை
கேட்டாலே உள்ளம் மெல்லாம் தேனூறும்

இணையத்தில் தமிழே
இணையற்ற உன் புகழே
கோடி தமிழர்கள் உச்சரித்தால்
உன் சுவையே  மாறாது
பன்னிரெண்டு உயிரெழுத்தும்
பதினெட்டு  மெய்எழுத்தும்
ஆயுத எழுத்துமாய்
உயிர் மெய்யாய்  நீ  நின்று

பல வகை சொற்களும்
உன்னிலிருந்து மலர்கிறது.
உன் புகழே அகிலமெல்லாம்
இன்னிசை பாடுது தமிழே
ஆயிரம் மொழிகள் தோன்றியும்
அழியாமல் நிக்குது நம் மொழி
உதிரத்தில் பிறந்த மொழி
உள்ளத்தில்  வளரும் மொழி
ஆயிரம் வணக்கம் சொல்வோம்
அகிலத்தின் மொழியாய்.


-நன்றி-
-அன்புடன்-
த.ரூபன்

திங்கள், 12 நவம்பர், 2018

கோலங்கள் மாறிய கலாசாரம்



கல்லில் அடிபட்ட மாங்கபோல
கசக்கி புளிந்த புளியம் பழம் போல
விதைகள் தெரிய சதைகள் கிழிய
நவ நாகரீகம் என்ற பெயரில்
அசிங்கமான உடை
குட்டப்பாவடை
நவீன யுவதிகள் பக்கம்
-------

பாட்டன் பூட்டன் கற்றுத் தந்த
கலாசாரத்தை மண்னோடு புதைத்து விட்டு
மனித நாகரீகம் என்ற போர்வையில்
மனிதம் மனிதத்தை மாசுபடுத்தி
வாழ்கிற வாழ்க்கையாக மாறிவிட்டது.இன்று
-------

அன்று ஒரு காலத்தில் பெண்ணால்
பெண்மையை போற்றி வாழ்ந்தாள்
இன்றைய நாகரீகம் என்ற போர்வையில்
அரை தெரிய உடையும்
ஆடை என்ற போர்வையில்
உடல் தெரிய அங்கவஸ்திரமும்
ஆடம்பர வாழ்க்கையாக மாறிவிட்டது.
--------
அப்பா அண்ணா சொந்தங்கள்
என்ற உறவு இருப்பதை மறந்துவிட்டு 
கவர்ச்சி உடையை அணிந்து.
ஆண் வர்க்கத்தின் மனநிலையை
பல திசைகளில் திசை திருப்பி
பெண்மையை சீரழித்ததும்
கலாசாரம் என்ற போர்வையில்
வலம் வரும் அரை குறை ஆடைகள்தான்.
--------
நிர்வாணம் என்பது அழகானது..
அது என்றும் கவர்ச்சியை தூண்டுவதில்லை.
இதை பூர்வீகக் குடிகளில் அவதானித்திருப்போம்.
நாகரீகம் என்ற போர்வையில்
வரும் அரை குறை ஆடைகள்தான்
பாலியல் கவர்ச்சியை தூண்டுகிறது
-------
நவீன உடை என்ற போர்வையில்
கலாசாரத்தை சீரழிக்க பவனிவரும்
ஆடைகளை தூக்கிப் போட்டு விட்டு
தமிழன் தமிழச்சி என்ற கலாசாரத்தையும்
நம் பண்பாட்டையும் சொல்லும்
உடைகளை வாங்கி
நம் இளைய சமூகத்திற்கு வழிகாட்டி
அன்பான தமிழனாய் வாழ்வோம்.

-நன்றி-
-அன்புடன்-
த.ரூபன்

புதன், 11 ஏப்ரல், 2018

ஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி

வணக்கம்
ஊற்று உறவுகளே.
இதுவரை காலமும் ஊற்று பல போட்டிகளை சர்வதேச மட்டத்தில் நடத்தி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கியுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

சித்திரை வருடப்பிறப்புடன்ஊற்று என்ற மாதாந்த இலக்கிய சஞ்சிகை வெளிவர இருக்கிறது உங்களின் ஆதரவுடன்.
அன்புடன்
ஊற்று நிருவாகம்
 
 

புதன், 14 பிப்ரவரி, 2018

ஞாபகங்கள்.


அகத்தில் மலர்ந்த றோஜாவே.
உன்னை அணைத்து எடுத்தேன் பல காலம்
புன்னகைப் பூவே புகுந்தது வாசம்
பூத்த  பூ புதுவசந்தம் வீசியது.

 மழைக்கால இருளில் மதி மயங்கும் போது.
ஒற்றை குடையுடன் ஓடி ஒதுங்கிய
ஆலமரமும் தெருவோர கடையும்
நமது ஞாபகத்தை சொல்லுமல்லவா.

வேப்பமரத்து பிள்ளையர் கோயிலில்
வேள்விகள் நடந்த போது.
என் நெற்றியில் நீ வைத்த சந்தனம்
இன்னும் பத்திரமாய் இருக்குதடி.

ஒற்றை பாலத்தில் நாம் நடந்த போது.
தாவித் தாவி என்னை இறுக பிடித்த நேரம்
காலம் கடந்த போதும்
கண்ணுக்குள் நிழலாடுகிறது..

எனக்காக நீ தந்த காதலர் தின
பரிசான கடிகாரம்.
செக்கன் முள்ளு செக்கனுக்கு செக்கன்
துடிக்கும் போது.

உன் நினைவுகள் நெஞ்சோடு மோதுகிறது.

-நன்றி-

வெள்ளி, 3 நவம்பர், 2017

அன்புள்ளவளே உனக்காக


என்னவளளே என்னவளளே எங்கு போகிறாய்
ஏங்கி தவிக்கிறேன் பல நாட்கள்
ஏழையாய் பிறந்ததனால்
எட்டிக் கூட பார்க்க மாட்டாயா.

பாசத்தின் இணைப்பால் என்
இதயமே சிறைப் பட்டு கிடக்கிறது
சிறைப்பட்ட இதயத்தை  புனிதப்படுத்த
எப்போது வருவாய்.
பல நாள் அன்புக்காய்
ஏங்கி தவிக்கும் உள்ளம் நான்

கடலில் கிடக்கும் மீன்கள் எல்லாம்
நீண்ட நாள் வாழ்வது கடினம்
எப்போது ஒரு நாள் 
மீனவனின் வலையில் சிக்குவது –போல
என்னவளளே நீ  ஒருநாள்
என் மனச்சிறையில்
சிக்குவாய் என்பதை நான் அறிவேன்

அகிலத்தில் காதலுக்கு மொழி கிடையாது
அகிலத்தின் புனித மொழியை
மெய்ப்பிக்கும் நாள் வரும்
அதுவரை உன் நினைவில்
என் நாள் கடக்கும்.

நன்றி
அன்புடன்
த.ரூபன்

வெள்ளி, 23 ஜூன், 2017

இழந்தது போது தமிழினமே!!

சுமைகள் சுமந்த வாழ்வுக்கு.!
சுகங்கள் தேடி தந்தார்கள்!
நம் மூத்தோர்கள்.!
பெற்ற சுதந்திரம்!
பெற்ற உரிமையும் மறுக்கப்பட்டு!
வீதியோரங்களிலும் நிழல் மரங்களிலும்!
நிம்மதி இழந்த வாழ்வாக!
வாழ்கிறான் தமிழர்கள்!

ஆயிரம் கட்சிகள் ஆயிரம் கொடிகளும்!
ஆரவாரம் செய்ய!
சாதியும் மதமும் இறுமாப்பு காட்டி!
ஏறுகிறான் சொற்ப சிம்மாசனம்!
ஐந்து வருடங்கள்!
ஈழத்திலும் வர்மாவிலும் தமிழனின்!
உயிர்கள் நயவஞ்சகர்களின் கையில் துடிக்க!
மலாய மண்ணில் தமிழன் உரிமை மறுக்கப்பட!
தமிழனின் எதிர்காலம்!
மரணக் குழியில் புதைந்து கிடக்கிறது!

அவலங்கள் கண்டு துடிக்காத!
தமிழ் தலைமைகள்!
இருந்தென்ன இலாபம்.!
தமிழ் மக்களே! பணத்துக்காக,!
அற்ப சுகத்துக்காக உங்களின்!
உரிமையை விலை பேசாதீர்கள்!
பொன்னான உரிமையை மண்ணாக்காமல்!
எதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு வழிவிட!
வரும் காலத்தில் சிந்தித்து.

நம் உரிமையை செலுத்துவோம்!

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்- 

திங்கள், 8 மே, 2017

நேரில் கண்ட தெய்வம்

அம்மா அம்மா உந்தன் விழிகள் ஈரம்
முதுமையின் கோலம் தெரியுதம்மா
நீ சிந்திய குருதியும் நீ சிந்திய கண்ணீரும்
நினைவுகள் வரும்போது நெஞ்சமெல்லாம்
அனலாக உருகுதம்மா.

இளமைக்கோலத்தில் நீ இருந்த போது.
ஏழ்மையாய் நீ இருந்தாய் அம்மா
இடிதாங்கி வலி தாங்கி உதிரத்தை பாலக்கி
என்னை ஊட்டி வளர்த்த தாயே.

அன்னம் ஊட்டியவள் அறிவுக் கண் திறந்தவள்
ஆயிரந்தான் தவறுசெய்தாலும் அணைத்து எடுப்பவள்
ஆண்டவனிடம் தவமிருந்து உயிர்பிச்சை கேட்பேன்
ஆயிரம் வருடம் வாழவேண்டும் மென்று.என் அன்னை.

ஆண்டவனின் விதியோ. மரணம் வந்து அழைக்க.
கண்ணீர் துவைந்த விழிகளுடன்
ஏக்கம் கலந்த வாழ்வாக
என்நாளும் வாழ்கிறேன் தாயே.
உன் கல்லறை அருகில்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்


 
கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 14-04-2017தொடக்கம்10-05-2017 

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்

 மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்
 
தலைப்பு-சித்திரை வெயில் வாட்டுதே...
 
 
போட்டியின் நெறிமுறைகள்.

 
1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு  20வரிகளுக்கு மிகாமல் 

எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

 

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

 

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

 

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் 

(இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

 

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

 

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

 

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

 

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது

10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்

11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி 

ootru2@gmail.com

 

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்

இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்

மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்

(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

 

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) 

பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

 

முன்பு நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது… கிடைத்தவுடன் மின்னஞ்சல் செய்யவும்

-நன்றி-

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர்

-கவிஞர்..ரூபன்-