வெள்ளி, 17 டிசம்பர், 2021

உலகமே திரும்பிப் பார்




மண்ணில் மாந்தரைப்  படைத்த இறைவா.
பிறக்கும் போதே  என்னை
கருவில் அழித்திருக்கலாம்.
நான் என்ன பாவம் செய்தேன்
உலகமே! என்னை எள்ளி நகையாட

அரிய சிம்மாசனத்தில் நீ இருக்கிறாய்
அம்மா அப்பா செய்த பாவத்திற்கு
பாவப்பட்ட கைதியாய்-
வீதியோரம் சிறை வைக்காதே.

 

தாழ் போட்டுப் பூட்டிய  இரவு
கதிரவனின் ஒளி கண்டு
திரை  விலகுவது  போல.
என் வாழ்விலும்
ஒளி விளக்கு எப்போது?
இறைவா!......ஏக்கத்துடன்

மனம் விட்டு  என்
இதயத்தில் உள்ளதை
உயிர் வரியாய்த்  தருகிறேன்
தன்  நிறைவு  வளம் கொண்ட  நாடுகள்
 

மனித உதிரத்தைக் குடிக்க.
கந்தக  குண்டுகளை  பொதி  செய்ய
ஆயிரம் கோடிகள் செலவு
 
பூகோள  வையகத்தில்.
பூ ப்போல புன்னகைக்கும்
என்னைப்  போன்ற  அனாதைச்
சிறுவர்கள்  எத்தனை.
அவர்கள் வாழ்விலும்  இருளை  அகற்றி
பட்டினிச்சாவை  தடுத்திட
கோடிப்  பணத்தை  செலவிடுவாய்.

உலக நாடுகளே!.


அன்புடன்
கவிஞர் .ரூபன்.




4 கருத்துகள்:


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்