உன்னை பார்த்த
நாள்முதலாய்
உன்னை பற்றிய
விசாரிப்பு தொடங்கியது.காலங்கள் நாட்கள் மெதுவாக நகர
உன் மீது வைத்த பாசமும்
கரை புரண்டு ஓடியது.
ஆகாய நட்சத்திரங்கள் எல்லாம்
விட்டு விட்டு எரியும்
நட்சத்திரங்களாக காட்சியாக விரிகிறது.
படுக்கை அறையில் கண்மூடி தூங்கயில்
உன் விம்பங்கள் சுவர் எல்லாம் தெரிகிறது
பல் துலக்கப்போனால் நீண்ட நேரம் எடுக்கிறது.
உன் நினைவுதான் நெஞ்சறையை வருடுகிறது.
வற்றாத ஜீவ நதி போல உன்
நினைவை வினாடிக்கு வினாடி
ஞாபகமாய் வீணை ஒலி மீட்கிறது.
என் இதய நாளங்கள்.
என் கணினியின் திரையில் கூட
உன் உருவந்தான் மின்னுகிறது.
என் கணினியின் என்றர்(ENTER) கீயை
அழுத்தும் போது. உன் நினைவை
அழுத்துவது போல ஒரு உணர்வு
என்றென்றும் காதல் நட்பினால்
காலம் கடக்கிறது. உன் காந்தப் பார்வை
எப்போதும் என்மீது வீசட்டும்…….