நேற்று,....
அன்னியவன் கையில் பாரத தேசம்
இருந்த போது, நம்மக்கள்
அவலவாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விலை மாடுகள் போல நாடுகடத்தப்பட்டார்கள்.
எல்லாத்துயரங்களையும் நெஞ்சில் தாங்கியபடி
தினம் தினம் கண்ணீர்வடித்துக்கொண்டே வாழ்ந்தார்கள்.
எங்கே எம் தேசம் விடியாதா? எங்கே எம்தேசம் விடியாதா.?
சுதந்திர தாகம் மலராதா என்ற ஏக்கம்
சுதந்திரவேள்வித்தீயில்,
ஆயிரம் ஆயிரம் வீரர்கள் மார்பில்
குண்டுகள் பட்டு வழிந்த இரத்தத்தில்
பிறந்தது பாரதக் கொடி,
அதுவே எங்கள் தேசத்தின் அசோகக் கொடி..
இன்று…….
அரும்பாடுபட்டுப்பெற்றசுதந்திரம்எங்கே?
அன்றாடம் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும்
இளம் பெண்களை பாலியல் வண்கொடுமை
என்ற சொற்றொடர் தாங்கியபடி
தினம் தினம் செய்திகள்..
பெற்ற சுதந்திரம் எங்கே பெற்றசுதந்திரம்எங்கே?
மீன் பிடிக்க கடலுக்கு போன மீனவன் வரும்வரை,
மனைவி கரையில் கண்ணீர் சிந்துகிறாள்
சுதந்திர நாளில் செங்கோட்டையில்
சிகப்புக் கம்பளம் விரித்து கொடி ஏற்ற,
உப்புக்கடலில் மீனவன் இரத்தம் சிகப்பாகிறது
எங்கே சுதந்திரம் புதைந்தது?
நாளை……
பட்டொளி வீசும் பாரதக்கொடி ஏறட்டும்
பாரத மாந்தர்கள் மகிழட்டும்
நெஞ்சினில் இனிப்பு திகடட்டும்
சத்திய தர்மம் நிலைக்கட்டும்
சமாதானம் நிலவட்டும்!
பாரததேசத்தில் வாழ்வோருக்கும் வாழ்த்துக்கள்..
சுதந்திரதேசத்துக்காய்
இன்னுரை ஈகம் செய்தோர்க்கும்
வீர வணக்கம்!!!
இந்தக்கவிதை பாரத தேசத்தின் விடுதலை நாளை முன்னிட்டு
இந்த மின்இதழ்ழுக்கு எழுதுதியது பார்வையிட முகவரி இதோ சொடுக்கவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-