சிட்டுக்குருவி போல்சுதந்திரமாய்.
வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று
சிதர்உண்டு சிதையுண்டு
சுதந்திரக் காற்றினை ஓரளவு
சுவாசித்து வாழ்ந்த எம்மினம்
இன்று வாழ்விடம் இழந்த
அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
சிட்டுக்குருவி போல்சுதந்திரமாய்.
வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று
சிதர்உண்டு சிதையுண்டு
சுதந்திரக் காற்றினை ஓரளவு
சுவாசித்து வாழ்ந்த எம்மினம்
இன்று வாழ்விடம் இழந்த
அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
வாழவேண்டுமென்று -பிறந்த
எம் வாலிபர்கள்-என்ன பிழை செய்தார்கள்.
செய்யாத தப்புக்கு சில ஆண்டு சிறைவாசம்.
அந்த கொடுமையின் வேதனையை பாருங்கப்பா?
சிறைவாசம் வாடும் பிள்ளையை-பார்க்க.
ஈன்றெடுத்த தாயானவள்-கையில் பணம் இல்லாமல்.
பிச்சை எடுத்து பார்க்கப் புறப்படுகிறாள்
பெற்ற பாசம் சும்மா விடுமா???
தமிழ் இனம் அன்றும்- இன்றும்
வாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
ஏர்பிடித்து நிலம் உழுது
வாழ்ந்த தமிழ் இனம்
இன்று பாத்திரம் ஏந்தி-ஒருசான் வயிற்றுக்கு
வீதி ஓரமாய் நின்று பிச்சை எடுக்கும்
காலமாக மாறி விட்டது………….
இந்த அவல வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட
தமிழ் இனம் வந்தாரை வா..வா.. என்று
அழைத்து விருந்தோம்பும் பண்பு.
கொண்ட தமிழ்இனம்
இன்று வா.வா.என்றுநம்ம அழைத்தவர்கள்.
இன்றுநமக்கு விருந்தோம்பல் செய்கின்றார்கள்.
இது காலத்தின் தண்டனையா?-அல்லது.
இறைவனின் தண்டனையா?
அன்றும் இன்றும் தமிழ் இனம்
வாழ்விடம் இழந்த அனாதைகள்
இன்றுநமக்கு விருந்தோம்பல் செய்கின்றார்கள்.
இது காலத்தின் தண்டனையா?-அல்லது.
இறைவனின் தண்டனையா?
அன்றும் இன்றும் தமிழ் இனம்
வாழ்விடம் இழந்த அனாதைகள்