நமது வலையுலக நண்பர்.
பாசமிகு அண்ணாவான திரு.கில்லர்ஜி அவர்கள் தொடக்கி வைத்த தொடர் பதிவால் வலையுலகம் மிக
உச்சாகமாக உள்ளது.அந்த வகையில் கில்லர்ஜி அண்ணாவுக்கு எனது நன்றிகள்
பத்து ஆசைகளை கில்லர்ஜி
அண்ணா அழகாக சொல்லியுள்ளார். அந்த தொடர் பதிவில் சிக்கிய சகோதரி தேன்மதுரத் தமிழ் என்ற
வலைப்பூ சகோதரி என்னை தொடர் பதிவுக்கு அழைத்தார்கள் எல்லோரும் எழுதிக் கொண்டு வந்தார்கள்
நான் மட்டுமே அதில் எஞ்சியுள்ளேன். அந்தவகையில் என்னை தொடர் பதிவுக்கு அழைத்த சகோதரி
கிரேஸ்பிரதீபா அவர்களுக்கு எனது நன்றிகள்.
எனது பத்து ஆசைகள்
இதோ தங்களின் பார்வைக்கு.
1.கடவுச் சீட்டு
இல்லாமல் சுதந்திரமாக சகல நாடுகளுக்கும் செல்ல வேண்டும்
2.முகம் தெரியா
எனது வலையுலக நண்பர்களை நேரில் சந்திக்க வேண்டும் அந்த நாள் எப்போது மலரும் என்ற ஏக்கம்.
3.போட்டி பொறமை
இல்லாத மனிதம் வளர வேண்டும்.எல்லோரிடமும்.
4.அளவுக்கு அதிகமாக
கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒவ்வொரு தமிழனும் வாழ்வற்று கிடக்கும் அடித்தட்டு மக்களுக்கு
உதவ முன்வரவேண்டும்.
5.நடிகர்கள் நடிக்கிறார்கள்
அவர்களின் வாழ்வுக்காக. அந்த நடிகர்களின் பட விளம்பர படங்களுக்கு பாலினால் அபிசேகம்
செய்யும் மூட நம்பிக்கையை நிறுத்த வேண்டும்.
6.இல்லாத உறவுகளுக்கு
கொடுத்து உதவும் மனநலம் ஒவ்வொரு மனிதன் இடத்திலும் வளர வேண்டும்.
7.தமிழராக இருந்து
அவர்கள் சந்திக்கும் தமிழருடன் தாய்மொழியில் பேசாமல் வேற்று மொழி கலப்புடன் பேசுவதை
நிறுத்த வேண்டும்.தமிழன் என்றால் தமிழால் பேசுவோம….
8.வீட்டில் வளரும்
குழந்தைகளுக்கு எமது தாய் மொழியை கற்றுகொடுக்க வேண்டும் பெற்றோர்கள்…
உதாரணத்துக்கு-சன்தொலைக்காட்சியில்
சொல்லுங்கள் அண்ணா சொல்லுங்கள் இமான் அண்ணாச்சி நடத்தும் நிகழ்ச்சியில் தமிழ் வார்த்தை
தெரியாமல் அல்லல்படும் பிள்ளைகள் எத்தனை பார்த்தவுடன் நெஞ்சம் துடிக்கிறது..இந்த நிலை
மாறவேண்டும்.
9.பெற்ற தெய்வங்களை
முதியோர் இல்லங்களில் விடாமல் அவர்கள் இறக்கும் வரை பெற்ற பிள்ளைகள் சுமக்கவேண்டும்.
10.எனது தேசம்
எனது ஊர் என்ற நிலை உருவாகி.. சமூக சிந்தனை வளர வேண்டும்.
உதாரணத்துக்கு.-நாம்
போகும் பாதையில் ஏதாவது பள்ளங்கள் இருந்தால் ஒரு நிமிடமாவாது செலவழித்து..மூட முடியும்
என்றால் மண்ணால் மூடிவிடலாம் இல்லாவிட்டால்
அபாயமான பகுதி என்று அடையாளபடுத்தி செல்லவேண்டும்.
தொடர்பதிவுக்கு எல்லோரையும் அழைத்து விட்டார்கள் அதனால் யாரையும் அழைக்கவில்லை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-