சனி, 17 டிசம்பர், 2016

பெற்றவளே கண்ணீரில்.

கருவறையில் உன்னை பல காலம் சுமந்து.
இரு விழிகளிலும் கண்ணீர் மல்லக
இமையோரம் உன்னை இமைக்கும் நேரமெல்லாம்
விழி யோடு சுமந்தேன்.


வலியோடு உன்னை பெற்றெடுத்த தாய்யுள்ளம்
மடியோடு சுமந்து. மனதோரம் தாலாட்டி.
அன்பு மகனே என்று. ஆர்ப்பரிக்கும் -ஓசையில்.
என் காலம் கடக்கிறது.


நீ எட்டி எட்டி அடிவைக்க.
ஏழ் கடலும் துளைத்தெடுக்க.
எண்ணமெல்லாம் உன் நினைவு.
உயிராக கொல்லுதடா என் மனதில்


புத்தி கெட்ட மனிதர்கள் புயலாக வந்ததடா.
பூமியிலே. பொல்லாத காரியங்கள் நடக்குதடா.
போதை கொண்ட மனிதர்களும்
போர்க் குணமும் கொண்டார்கள்.


பொல்லாத கூட்டத்துடன் நீ சேர்ந்து.
தனியாக வாடுகிறாய் சிறையறையில்.
வேதனையில் துடிக்குதடா.பெற்ற மனம்
சோகத்தை பகிர யாருமில்ல.
சோதனையில் போகுதடா என் வாழ்க்கை.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-