புதன், 23 செப்டம்பர், 2015

புதுக்கோட்டைக்கு துவிச்சக்கர வண்டியில் போகலாம்.வாருங்கள் நண்பர்களே.





செந்தில்-சித்தப்பு 11-10-2015 புதுக்கோட்டையில் பதிவர் திருவிழாவாம். என்றுபலர் பதிவுகளை எழுதி எழுதி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.. அதுக்கு போகவில்லையா ..நீ..

கவுண்டன்-ஏ..மரமண்டைத்தலையா.. இது பற்றி பத்திரிகை தொலைக்காட்சி எல்லா பக்கமும் செய்தி வந்த வண்ணம் இருக்கு இதையெல்லாம் பார்க்காமல் .. என்ன செய்றா....

செந்தில்-என்ன சித்தப்பு மாலையும் ஆளுமா நிக்கிறீங்கள் என்ன சம்பவம்...

கவுண்டன்-நான் பதிவர் திருவிழாவுக்கு போய் முகம் அறியாத நண்பர்கள் நண்பிகளை சந்திக்கும்  பக்கியம் கிடைத்தது. அத்தோடு சேர்த்து.. மாலையும் போட்டாங்கள்..

செந்தில்-யார் சித்தப்பு போட்டது.யாரு நம்மட முத்து நிலவன் ஐயாதான் போட்டார்...அப்ப சித்தப்பு     நிகழ்வு முடிந்து விட்டதா.

கவுண்டன்-இல்லை மரமண்டைத்தலையா...

செந்தில்-அப்ப சித்தப்பு நான் வேகமாக  துவிச்சக்கர வண்டியில் போகப்போகிறேன்

கவுண்டன்-சரி போயிற்று  வா..

செந்தில்-சித்தப்பு...சித்தப்பு நிறைய பேர் துவிச்சக்கர வண்டியில் போறத்துக்கு நம்ம சகோ.பாண்டி நிக்கிறாங்கள் தனபாலன் அண்ணா நிக்கிறாங்கள் உதவிக்கு இருக்கிறாங்கள் அவங்களுடன் போறன் சித்தப்பு...


கவுண்டன்-சரிடா...சரிடா.. போயிற்று வா...


சரி நண்பர்களே நாம முதல் போறது என்றால்- பாஸ் நடமுறை ஒன்று உள்ளது அதில் பதிந்து ஊறுதிசெய்தால்தான்  நமக்கு உரிய சாப்பாடு தேனீர் எல்லாம் வரும் அதுக்கு இதோ

 சரி உங்களின் வலைப்பூ பதிவர் கையேட்டில் இடம்பெற வேண்டுமா.இதோ சொடுக்கி தகவலை அனுப்புங்கள்.

அடுத்தது நீங்கள்போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற வேண்டுமா.இதோ இங்கு செல்லுங்கள்

வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-


NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320




(இந்த வங்கிக் கணக்கு கணினித்தமிழ்ச்சங்க நண்பர்களின் ஆலோசனைப்படி, “நல்லாசிரியர்” திரு பொன்.கருப்பையா அவர்கள் உள்ளிட்ட இருவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. ஆயினும் ஒருவர் பெயர் குறிப்பிட்டாலே போதுமானது)

இந்தக் கணக்கின் வழி நன்கொடை செலுத்துவோர், நன்கொடையாளர் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை முதலான விவரங்களை bloggersmeet2015@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ, +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) தகவல் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
குறிப்பு-எனது ஜன்னல் ஓரத்து நிலா என்ற கவிதை புத்தக வெளியீட்டு புகைப்படங்களுடன் சந்திக்கிறேன் உறவுகளே.
 

வியாழன், 3 செப்டம்பர், 2015

காதல் என்னும் யாத்திரை..


கண்னை சிமிட்டும் மின்னல் போல.
உன் உருவம் என் கண்ணுக்குள்.
தினம் தினம் வெட்டி மறைகிறது.
உன் உதடுகள் ஏதோ வசிகரம் செய்ய.

என் இதய நாளஙகளில்உன் நினைவுகள்
என் நெஞ்சறை சுவாசத்தை திறக்கிறது.
நீ பேசாமல் மௌநித்த நிமிடங்கள் எல்லாம்.
என் கண்ணீர் கரை புரண்டு ஆறாக.ஓடியது.

 உன்னை என் மனச் சிறையில்.
காலமெல்லாம் விளக்கேற்ற.
கடவுள் தந்த பாக்கியமாய்.
காலமெல்லாம் சுமந்தேன் இதயத்தில்.

அன்புக்காய் அடிமையாகிய நாம்.
உன் நெஞ்சறையில் நானும்
என்நெஞ்சறையில் நீயும்.
அணையாத தீபமாய் சுடர் விட்டோம்.
காதல் என்னும் யாத்திரையில்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

எனது கவிதை நூல் வெளியீடு சம்மந்தமாக மலேசியா பத்திரிகையில்
2-9-2015 வந்த செய்தி...