வியாழன், 27 நவம்பர், 2014

நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பகுதி)

நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பகுதி)
 
அன்புள்ள
அம்மா- அப்பாவுக்கு
நலமா.

நான் நலம் தங்களின் நலம்  சகோதரங்களின் நலமறிய ஆவலாக உள்ளேன். எந்த வித துன்பமும் இல்லாமல் முடன
 வாழ இறைவனை வேண்டுகிறேன்.

 பாலைவனக் காற்றில் என் உதி நாளங்கள் கொதிக்கிறது. 
வேதனம் என்ற காசுக்காக  சுட்டெரிக்கும் வெயிலில்  துடியாய்துடிக்கும் புழுவாக துடிக்கிறேன்.
என் சகோதரங்களை நினைத்து நினைத்து.. என் இதயக் கதவுகள் துடியாய் துடிக்கிறது
வேலை தளத்துக்கு சென்றால் அம்மா ஊட்டிய  சாப்பாடும் அப்பா காட்டிய அன்பும் சகோதரம் காட்டிய உறவும்  என்னை கண் கலங்க வைக்கிறது. விதியோ சதியோ செய்யும் திருவிளையாடல் என்றோ நான் நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கிறேன். நாள்முழுதும்.

 தூங்கும்போதும் விழிக்கும் போது உறங்கும் போது உங்கள் நினைவுகள் கடலில் கடலை அடிப்பது போல ஆர்ப்பரிக்கும் ஓசை என்  மனக்கதவை திறக்கிறது. பாசமாக பழகிய எம் றவுகாரன்
இறந்தான் என்ற செய்தியை கேட்கும் போது வர முடியாமல்  நான் விமானத்தில் பறந்து வந்த திசையை நோக்கி பார்த்துக்கொண்டு இருந்தேன்.துன்பம் என்ற சிலுவையை நான் 
தினம் தினம் வெளி நாட்டில் சுமந்து வாழ்கிறேன் கவலை வந்தால் நான் வாழும் வீட்டின் நாகு சுவர்கள்தான் எனக்கு சொந்தக்காரன்.

 கவலை வேண்டாம் அம்மா.  நான் வருவதற்கு இன்னும் ஒருவருடங்கள் உள்ளது என்னை நினைத்து நினைத்து அப்பவும் .அம்மாவும் ஏங்கி தவிப்பீர்கள் என்பது எனக்கு நன்கு புரியும்.. என்ன செய்வது கஸ்டம் என்ற துன்பம் நம்மை ஆட்டி படைத்து விட்டது.அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சில காலம் அர பு தேசத்தில் உழைக்கிறேன்.
 என்னைப் போன்று பல உறவுகள் அரபு தேசத்தில் முகவரி தெரியாமல்உறவுகளின் முகம் தெரியாமல் பாலஆண்டுகள் வாழ்கிறார்கள் இருந்தாலும் நீங்கள் செய்த புண்ணியத்தால் உங்களுடன் தொடர்பு கொள்ளக்கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்..

நன்றி
அன்புடன்
மகன்( கண்ணன்)
 
 மகனின் மடல் வந்தவுடன் மகிழ்ச்சியடைந்தார்கள். மடலை பார்த்த பின்புதான் தெரிந்தது படுகிற துன்பத்தை.. அம்மாஅப்பா சகோதரங்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள்
கண்ணன் அரபு தேசத்தில் ஒரு தமிழ்ப்பெண் மீது காதல் வயப்பட்டு காதல் மோகத்தில் ஆழ்ந்தான். இப்படியாக 6 மாதங்கள் தங்களின் காதல்  பரிணாம வளர்ச்சியடைந்து மகிழ்ச்சி கடலில் பொங்கினான் ஒரு நாள் கண்ணனுக்கும் கமவுக்கும் இடையில் வாய்த்ர்க்கம் ஏற்பட்டது என்னை நீ கவனிக்க வில்லை. உன்னோடு இருந்து என்ன பலன் என்று தகாத வார்த்தை பிரயோகம் தாறும் மாறுமாக திட்ட கண்ணன் அன்று இரவு தூங்கவில்லை காலையில் வேலைக்கு போகவுமில்லை.

 தனது ரூமில் நின்றான். பல தடவை சிந்தித்து சோகத்தால் துவண்ட கண்ணன் தனது ரூமில் தூக்கு மாட்டி உயிரை மாய்த்தான்..  காதல் என்ற நட்பு வட்டத்தில் சங்கமித்த கண்ணன் இந்த காதலே அவனுக்கு இயமான வந்து...  கண்ணனுக்கு நடந்த துயரத்தை  அவனது நண்பர்கள் வீட்டுக்கு சொன்னார்கள்  அவனது வீட்டில் அழுகை சப்பதம் ஒலித்தது... எல்லோரும்
துயரத்தில் ஆழ்ந்தார்கள். சில நாட்கள் கழித்து கண்ணனின் வீட்டுக்கு அவனது உடல் கொண்டுவரப்பட்டது. அவனது குடும்பமும் ஊர் உறவுகளும் சோகத்தில் வாடினார்கள்
பின்பு கண்ணன் வந்த சவப்பெட்டியை  திறந்து பாரத்தால் அவன் தூக்கு மாட்டிய கயிறும் அப்பாவும் அம்மாவும் மற்ற சகோதரங்களும் ஒன்றாக இருக்கின்ற  புகைப்படம் ஒன்றும் இருந்தது. என்ன செய்வது  கண்ணனைப் போன்று பல ஆசைகளுடன் வெளி நாடு சொல்லும் பலரது வாழ்க்கை இப்படித்தான் போகிறது.. நிறை வேறாத ஆசையாக.....


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-