திங்கள், 30 டிசம்பர், 2013

காதலன் காதலியை கற்பனை செய்யும் விதம். இசையும் கதையும்-2

காதலன் காதலியை கற்பனை செய்யும் விதம். இசையும் கதையும் -2

தங்களின் கருத்தின் பிரகாரம் 3வது பகுதி தொடரும்.......

இந்த உலகத்தில் இறைவன் ஆணையும் பெண்னையும் படைத்தது இந்த பூமி பந்தத்தில் ஒன்றாக வாழ்ந்து இல்லறம் நல்லறமாக நடத்த வேண்டும் என்பதற்காக. ஆனால் ஒரு பெண் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். என்பதை அன்றோ பல நூல்களில் கூறியுள்ளார்கள்.சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகியை எடுத்துக்கொள்ளலாம்.ஆவாதும் பெண்ணாலே இந்தபூமி  அழிவதும் பெண்ணாலே. தெற்கு மதுரை சுடர் விட்டு எரித்தும் பெண்ணாலே.தாலிக்காயிற்றுக்கு பாசக்கயிறு என்றும் வந்ததும் பெண்ணாலே.இந்தியா தங்கப்பதம்வென்றதும் பெண்ணாலே. ஒரு பெண்தான் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணம் . அடுப்பங்கரையில் வேலை செய்கிறவர்கள் என்று கற்பனை பன்னக் கூடாது. அவர்களும் ஆண்களுக்கு சமமாக உள்ளார்கள் என்பதை கவிஞன் மிக அழகாக சொல்லியுள்ளான்

(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)

திருமணம் என்ற வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை தருவது பிள்ளைச்செல்வம்தான் அந்த பிள்ளைச்செல்வம் பிறந்தவுடன் எவ்வளவு கற்பனைகள் கணவன் மனைவி இடையே செயல்வடிவம்மாக பிறக்கிறது அதிலும் ஒரு பெண் பிள்ளை பிறந்தால் எவ்வாறு அழைகிறார்கள் என்று பார்த்தால் என்னசின்ன மகராணி மகளாக வந்தாள் தாய் தந்தயின் முகத்தில் சிரிப்பை கொடுத்தால் தங்கள் வீட்டில் உள்ள கடிகார நேரங்கள் எல்லாம் தன் மகளுக்காகவே சுற்றுகிறது. என்கிறார்கள். றோஜாப்பூவின் இதழும் ஒன்றே உன் முகமும் ஒன்றே நீ பிறந்ததால் எங்கள் வாழ்க்கை பாதை எல்லாம் மலர்மாலைவரவேற்பது போல எங்கள் உள்ளங்களை வரவேற்கிறது என்பதை கவிஞன் மிக அழகாக சொல்லியுள்ளான்

(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)

காதலன் மக்கள் கூட்டத்தில் இருக்கிறான் அந்த நேரத்தில் அவனுடைய காதலி காதலனை தேடுகிறாள் அதைப் போல காதலனும் தன் காதலியை நினைக்கிறன் அவளுடைய கொழுசு சத்தம் அவன் காதில் கேட்கும் போது தொலைபேசி மணிஒலிப்பது போல ஒரு உணர்வு.அவளைக் கண்டவுடன் அவன் மனசில் மின்னல் ஒளி பாய்ந்தது போல ஒரு உணர்வு வந்தது. காதலன் அவளை நினைத்து பாடும் பாடலுக்கு இராகம் கொடுத்ததும் நீதானேஅந்த பாடலுக்கு அவளின் ஒளி மிக்க காதல் பார்வை அவன் நெஞ்சில் இசையாக யாழ் மீட்கிறதுவெளியில் உள்ளது எனக்கு பூக்காவனமாக தெரியவில்லை உன்னை நினைத்த நாளில் இருந்து நீயே எனக்கு பூங்கவனமும் பிரிந்தாவனமும் நீயே ஆகாயத்தில் இருக்கிற மேகத்தின் அழகை விட  நீ தான் அழகு என்று காதலியை பார்த்து சொல்லுகிறான். .

(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்

 

 

காதலன் பெண்னை நிலவுக்கு சமமாக ஒப்பிடுகிறான் நிலவானது பல தேசங்கள் பல நீர்ரோடைகள் கடந்து செல்லும் போது அதன் அழகு அழகுதான் அதுமட்டுமா மதுளையின் பூப்போல மலரகிறஇதழ் போலஉன் உதடு மானினங்கள் மீனினங்களும் பார்த்தவுடன் மயங்கும் விழியமைப்பும் அவளின் நெற்றி புருவம் வளைந்த வில்லைப்போலவும் அந் வில்லுக்கு பெண்ணின் பார்வையை அம்பாக உவமிக்கிறான் காதலன் அவளின் அந்த இளைமையான கட்டளைபருவம் ஒரு களமாக அவளின் குழிவிழுத்த கன்னத்தில் தேனின் சுவைக்கு சமமான சுவை என்று வர்ணிக்கிறான் முத்து பவளங்கள் போல அவளின் விரல்கள் அவளின் கழுத்து அழ்கடலில் எடுத்த சங்காக.இப்படியாக காதலன் காதலியை வர்ணிக்கிறான்

(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்

காதலன் முதல்காதல் அவனின் கற்பனையில் அவனுடைய காதலி அவனை தேடி வருகிறாள் அந்த வேலையில் வண்ணமாலைசூடவந்தாள். நூறுஜென்மங்கள் உன்னுடன் ஒன்றாக சேர்ந்திருப்பேன். அந்த நேரத்தில் பூக்கும் செடி எல்லாம் அவளின் வரவுக்காய் வரவேற்று சிரிக்கிறது அவனுடைய பார்வை அவள் வருவதற்கு முன் எட்டு திசை எங்கும் பார்த்த கண்கள்அந்த திசைகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி தன் காதலியின் வருகையை பார்கிறான் என்னுடைய கண்ணுக்குள் உனது விம்பம்தான் என்னுடைய நெஞ்சுக்குள் உனதுநினைவுதான் என்னுடைய உள்ளம் கூட உன்னிடத்தில் என்னுடைய நிழலில் நீ நடக்க எனது உயிரையும் உனக்காக தருவேன் என்று காதலன் மிக அழகாக காதலியை பார்த்து வர்ணிக்கிறான் (PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

புதுவசந்தம் தந்திடுவாய் புத்தாண்டே

Rainbow Text - http://www.myrainbowtext.com


அம்மா அப்பா தம்பி தங்கை.அண்ணா
என்ற பாச உறவுகளுடன் –கூடி மகிழ்ந்த வீடல்லவா.
சுற்றி திரிந்தோம் திண்ணைகளில்.
சுகமாய் இருந்தோம் – அப்போது.
அன்பும் உறவும் சூழ்ந்திடவே.
சுகமாய் இனிதாய் இருந்த வீடல்லவா.
முன்பு மூடிய சுவருடன் உள்ளது -எங்கள் வீடு
இப்போ திறந்த வெளிதனில்
ஒற்றை சுவருடன் நிக்கிறது
வீட்டை சுற்றி பூஞ்செடி வைத்து
நந்தவனம் போல இருந்த வீடு.
இப்போ பாலைவனமாக இருக்கிறது.
எங்கள் குடும்பத்தில் உள்ள கல்விமான்கள்
அத்தனைபேரும் பிறந்து வளர்ந்து
 படித்த வீடு- இதுஅல்லவோ.
வீட்டை உருவாக்கா என்அப்பா என் ஆத்தால்
என்ன வியர்வை சிந்திருப்பார்கள். ??
எங்கள் வீட்டிடைப் பாரும்
பட்ட துன்பம் அழகாய் தெரியும்
புத்தாண்டே நீ வந்திடுவாய்
எங்கள் வீட்டில் நாங்கள் –வாழ்ந்திட
வாழ வழி செய்யும்-எத்தனையோ
மனிதப் பிறவிகள் துன்பத்தில் –வாடுகிறது.
அவர்கள் வாழ்விலும் எங்கள் வாழ்விலும்
புது இல்லங்களில் புகுந்திட
புது வசந்தம் வீசிடுவாய்..புத்தாண்டே

கொட்டும் பனியிலும் கொட்டும்-மழையிலும்
குடும்பத்தை பிரிந்து தன் குடும்பத்தை விட
நாடே நமக்கு மேலானது என்று எண்ணியபடி.
உள்ளக் கிடக்கையில் உணர்வுகள் தேங்கி நிக்க
இரவு பகல் விழித்து. நாட்டு எல்லைப்புறத்தில்
காவல் காக்கும் வீரர்கள் எத்தனை.
நாட்டுக்கு நாடு நடைபெறு யுத்தத்தை
மலருகிற புத்தாண்டில் அமைதியாக்கிடுவாய்.-புத்தாண்டே.
துன்பப்படும் மக்களுக்கு புதவசந்தம் வீசும்-புத்தாண்டே
நாட்டுக்கு உழவே தலைசிறந்து என்று
எண்ணியபடி அல்லும் பகலும் வியர்வை-சிந்தி
எண்ணிய சிந்தனையில் ஏர்பிடித்து
நிலம் உழுதும் விவசாயின் வாழ்க்கையில்.
வரலாறு கானாத.விளைச்சளை –அள்ளி
கொடுத்துடுவாய் புத்தாண்டே.
புத்தாண்டே நீவருக.
எங்கள் வாழ்வில் புதுவசந்தம்-தந்திடுவாய்
 
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


சனி, 21 டிசம்பர், 2013

நெஞ்சை தழுவும் நினைவுகள்-(சிறுகதை)

 நெஞ்சை தழுவும் நினைவுகள்-(சிறுகதை)

 
வறுமையும் விடவில்லை செய்த தொழிலும் கைகூடவில்லை யுத்தம் என்ற கொடிய விசம் பரவியது தாங்க முடியாமல் அயல்தேசம் போனவர்கள் எத்தனைபேர். வெளி நாட்டு வாழ்க்கையில் சுகபோகம் அனுபவிப்பார்கள் என்று எத்தனை உள்ளங்கள் ஏங்கி அலைமோதும் ஆனால் இங்கு ஒவ்வொரு நிமிடமும் படும் துன்பங்களும் துயரங்களும் அவஸ்த்தைகளும் தாங்க முடியாமல் தன்னுயிரை தானாக மாய்த்த உறவுகள் எத்தனை பேர் …காய்ச்சல் தலைவலி என்று துடியாய்த்துடித்தாலும் எம்முடைய உடல் நலம் எம்முடை துக்கம் விசாரிக்க கூட சொந்தங்கள் இருந்தும் இல்லாத அனாதைகள் போல தவியாய்த் தவிக்கிறோம். அம்மா அப்பா அண்ணா தம்பி என்று அழுகிற கதறல் குரல் மட்டும் நான்க சுவர்களுக்கு மட்டுமே கேட்கும் .இந்த கொடிய துன்பத்தை சுமந்து வாழ்கிறார்கள்

திருமணம் ஆனவர்கள் மனைவியை பிரிந்த சோகமும் பெற்ற தெய்வங்களை பிரிந்த சோகமும் பெற்ற பிள்ளயை விட்டு பிரிந்து சென்ற சோகமும் பிள்ளையோடு இருந்து பாசம் பரிமாறும் வயதினிலே அயலான் தேசத்தில் டலருக்காகவும் யூரோக்காவும் ரிங்கிட்டுக்கும் ரியாலுக்கும் அன்னியவன் நாட்டில் அடிமாடுகள் போல உழைக்கிறார்கள் தங்கள் உறவுகளுக்காக பணம் அனுப்புகிறோம் கொஞ்சம் சந்தோசம் கலந்த முகபாவனை முகத்தில் துள்ளும் அந்த நேரத்தில் மட்டும்…..ஆனால் மனதில் ஒரு விததுன்பம் எம்மை அறியாமல் ஓடிக்கொண்டதான் இருக்கும் இந்த வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் தள்ளாடுகிறார்கள்…
 
பக்கத்து விட்டுத் திருமணங்கள் விசேட நாட்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்கள் எல்லாம்  எம்தாயக சொந்தங்களுடன் கூடி சந்தோசம் அடைந்த நாட்கள்.முதல் காதல் வந்த போது முதலில் காதலியை சந்தித்த இடம் அவளோடு இருந்து பேசிய பனைமரத்தின்  நிழலும் நாகமரத்தின் நிழலும்அந்த திருவிழாக்காலங்களில் காதலியுடன் கடைத்தெருக்களை சுற்றித்திரிந்த காலங்கள் அம்மா அப்பாவுக்கு தெரியாமல் காதலியை துவிச்சக்கர வணடியில்(சைக்கில்) ஏற்றித் திரிந்த காலங்கள் ஞாபஅலைகள் மனக் கதவுகளை ஒருனம் திறக்கிறது…..இந்த நாட்களை நினைக்கவில்லை மறந்து விட்டார்கள் என்று சொந்தங்களும் காதலியும் நினைக்கலாம் ஆனால் அத்தனை நினைவுகளையும் இரவும் பகலுமாக நெஞ்சில் சுமந்த வண்ணம் அழுது கொண்டு வாழுகிறோம்… 


கோயில் மணி யோசை கேட்டல் ஊரில் உள்ள நண்பர்கள் எல்லோரும் கூட்டமாக சென்று இறைவனை வணங்கும் நிகழ்வும்இறுதியில் பூசை முடிந்தவுடன் பிரசாதம் வேண்ட நான் முந்தி நீ முந்தி என்று வரிசையில் நின்ற நாட்கள் திருவிழா என்று வந்தால் ஊர் எங்கும் பட்டாசு சப்பதங்களும் இரவு நேரங்களில்  சதங்கை ஒலி கேட்க மாட்டு வண்டியில் எம் ஊர்ச் சொந்தங்கள் இரவு நேர சாப்பாடும் எடுத்துக்கொண்டு செல்லும் அந்த மாட்டு வண்டி அணிவகுப்பை நிலாக் காலங்களில் இரசித் நினைவுகளும் எம் மனதை விட்டு அகல வில்லை  இந்த மகிழ்ச்சியான காலங்களை நினைத்து நினைத்து தினம்தோறும் கண்ணீர் வடிப்பதுதான்…. வாழ்க்கையாகியது

ஒவ்வொரு ஞாயிறு என்றால்  எங்கள் உரில் பொது வேலை(சிரமதானப்பணி) என்ற ஒன்று நடை பெறுவது வழக்கம் ஒவ்வொரு வீதீக்கு வீதீ மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சுத்தம் செய்வது வழக்கம் வேலை முடிந்தவுடன் இளைப்பாற தேனீர் கொடுப்பார்கள் அதை எல்லாம் வேண்டி நண்பர்களுடன் இருந்து சுவைத்த காலங்கள் எம் மனதை விட்டு விலக வில்லை

ங்களுடை ஊரின் அமைவிடம் மக்கள் குடியிருப்பை சுற்றி பரந்த வயல் வெளி மூன்று போகம் வேளாண்மை செய்வார்கள் மார்கழி மாதம் என்றால் மழைக்காலம் எங்கள் ஊரில் அடைமழை பொய்ந்தால் காடுகள் வயல் நிலங்களை சூழ்ந்து தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுக்கும் காலம்  ஊரில் உள்ளவர்கள் வயது வித்தியாசம் இல்லாமால் தாங்கள் வளர்க்கும் நாய்களுடன் உள்ளுர் துப்பாக்கியுடனும்(சைற்றடியன் என்று சொல்வார்கள்) உருட்டுக்கட்டைகளுடனும் காடுகளுக்குள் புகுந்து மிருகங்களை தண்ணீரில் பாய்ச்சி ஓடமுடியாத அளவுக்கு செய்து முயல் மான் மரை. போன்ற மிருகங்களை ஊர் நண்பர்களுடன் வேட்டையாடிய காலங்கள் அந்த நேரத்தில் நீச்சல்அடிக்க தெரியாமல் தண்ணீரில் தத்தளிக்கும் நண்பர்களை ஒன்றாக கரை சேர்ந்த  நினைவுகள்….. தூரதேசத்தில் வாழம் போது மார்கழி மாதம் வந்தால் அந்த நினைவுகள் ஒரு தடவை புரட்டிப் போட்டு விடும்……


மரணச் செய்தியோ அல்லது நல்ல நிகழ்வுகள் பார்க்க முடியாமல் வாடிய மனசுடன் அரபு நாட்டில் வாழ்பவனுக்கு அரபுக்கடலும் ஆசிய நாட்டில் வாழ்பவனுக்கு ஆசிய கடலும் ஐரோப்பாநாட்டில் வாழ்பவனுக்கு ஐரோப்பாகடலும் சொந்தம் என்று நினைத்து நம் தேசம் இருக்கும் பக்கத்தை விமானம் பறந்துவருகிற பக்கத்தையும் திரும்பிப்பார்த்து கடல் மாதவிடம் சோகத்தை கொட்டுவதே வாழ்க்கையாகி விட்டது……… எல்லாச்சோகத்திற்க்கும் கடல்தான் சொந்தமாகியது
இருப்பவர்கள் துன்பத்தை சுமந்தவன்னம் வாழ்கிறார்கள் மீண்டும் போகிறவர்கள் துன்பத்தை தூக்கி எரிந்து விட்டு போகிறார்கள்…..ஊரில் உள்ளவர்கள் வெளி நாடு போகவேண்டும் என்ற ஆசையும்  வெளி நாட்டில் உள்ளவர்கள் சொந்த தேசம் போக வேண்டும் என்ற ஆசையும் அவர்களின் மன வானில் கொடிகட்டி பறக்கிறது…மேல் சொல்லியுள்ள நினைவுகளும் துன்பங்களும் எத்தனை மனிதர்களின் வாழ்வில் அன்றும் இன்றும் நடைப்பயணமாக பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது..........
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 19 டிசம்பர், 2013

இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள்

இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள்


கமல் பிறந்து வளர்ந்து 8 வயது இருக்கும் போது அவனுடைய தாயும் தந்தையும் ஒரு விபத்தில் சிக்கி மரணம்அடைந்தார்கள்.பின்பு அவன் தன்னுடைய பாட்டியின் அரவனைப்பில் வாழ்ந்து வந்தான் பள்ளியில் துள்ளித்திரிந்த காலங்கள். மற்ற பிள்ளைகளை அவர்களுடைய தாய் தந்தையர் கை பிடித்து கூட்டிக்கொண்டு வரும் போது கமல் தன் தாயையும் தந்தையும் நினைக்கிறான் அப்போது .இந்த காணம் ஒலிக்கிறது. (PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)


இப்படியாக நினைவுகள் அவன் நெஞ்சை கசக்கி பிழிந்தது.என்ன செய்வது எல்லாம் இறைவன் செயல் என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டு பள்ளி விட்டவுடன் வீட்டுக்கு சொல்கிறான் அங்கு பாட்டியின் உடல் நலம் விசாரித்த பின் எனக்கு வாழ்வான வாழ்வு தந்த தாயும் தந்தையும் முற்றத்தில் வைத்து நிலாச்சோறு ஊட்டி தேனான வார்தைகளும் பேசி சிரித்து விளையாடிய காலங்கள் அவர்கள் என்னை தோழில் சுமந்து தாலாட்டுப்பாடி நடந்த போது அவர்களின் கால்த் தடங்கள் பதிந்த முற்றங்கள் எல்லாம் நினைத்து பார்கையில் என் விழியோரங்களை நனைத்தது கண்ணீர்த்துளிகள்.அந்த வேளையில் இந்த காணம் ஒலிக்கிறது. (PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)

இந்த சோகங்கள் எல்லாம் ஒருபக்கம் இறக்கிவைத்து விட்டு அவனுக்கு உயர்தரப்பரீட்சை எழுதும் காலம் நெருங்கியது அதற்காக அவன் விடாப்பிடியாக இரவும் பகலும் கண்விழித்து படித்திருந்தான். விடியக் காலையில்8.மணிக்கு பரீட்சை மண்டபத்திற்கு சென்றான்அவனுக்கு முறைப்பெண்ணான காவேரியும் பரீட்சை எழுத வந்தாள். கமலை கண்டவுடன் காலை வணக்கம்என்று புன்னகை பூத்த வண்ணம் சொன்னாள் அதற்கு கமலும் பதில்வணக்கம் சொன்னான் ஒரு நாளும் பேசாத காவேரி ஏன் இப்போ பேசவேண்டும் என்று தன் மனதுக்குள் நினைத்தான்பாலைவனமாக இருந்தஇதயம் கூட அவள் பேச்சில் துளிர் விட்டு துளீர்த்தது.அவள் பேச்சிலேஅவளின் மூச்சிக்காற்றை சுவாசிக்க என் இதயம் துடியாக துடித்தது. அப்போது இந்த காணம் ஒலிக்கிறது.
(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)


நமக்கு எந்த சொந்தங்களும் இல்லை நமக்கென்று நானே வாழ்வு அமைத்தால் என்ன என்ற உணர்வுடன் வெண்நிலவு போல உள்ள காவேரியின் மனதில் உள்ளதை அறிய காதலுக்கு தூதுவாக காகிதத்தில் கடிதம் எழுதி அவள் மனதை அறிய நினைத்தேன். அவள் இடம் இருந்து சாதகமாக பதில் வந்தது. அப்போது. அவனின் மனதில் ஒரு மகிழ்ச்சிப் புயல் வீசியது. அந்த வேலையில் இந்த காணம் ஒலிக்கிறது.  (PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)


இப்படியாக கமலின் காதல் நாள் அடைவில் வளர்ந்தது. காவேரியின் வீட்டுக்கு தெரிய வந்து. அவர்களின் சம்மதத்தின் பெயரில் இருவருக்கும் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றது .அந்த வேளையில் கமல் உணருகிறான் ஆரம்பத்தில் அம்மா.அப்பா இல்லை என்ற வேதனையால் என் விழியோரங்களை கண்ணீர்த்துளிகள் நனைத்தது. ஆனால் இன்று என் விழியோரங்களை ஆனந்தகண்ணீர்த்துளிகள் நனைக்கிறது இப்படியான காவேரி மனைவியாக கிடைத்ததை நினைக்கும் போது இந்த காணம் ஒலிக்கிறது.
(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)



முடிவுரை-கமல் வாழ்வில் தாய் தந்தையை இழந்து இளம் வயதில் அவனது விழியோரங்களை அவனது கண்ணீர் துளிகள் நனைத்தது.மிகவும் கஷ்டப்பட்டு படித்து அவன் இறுதில் காதலித்த பெண்னை திருமனம் செய்து வாழ்கிறான் துன்பக்கண்ணீர்த்துளிகள் அவனது விழியோரங்களை முன்பு நனைத்தது இப்போ விழியோரங்களை காதல் என்னும் ஆனந்த கண்ணீர் நனைக்கிறது.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திங்கள், 9 டிசம்பர், 2013

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி


Add caption

 

போட்டிக்கான தலைப்பு :
 
1. இணையத்தின் சமூகப் பயன்பாடு.
 
2. இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்.
 
3. போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்.
 
4. உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா...?
 
5. தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
 
போட்டியின் விதிமுறைகள் :
 
1.  இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தால் நல்லது.
 
2.  ஒருவரே எல்லாத் தலைப்புகளிலும் கட்டுரையை தங்களின் தளத்தில் பதிவிடலாம்.  பதிவர்கள் அல்லாதவர்கள் அனுப்பலாம்.  ஆனால் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை மட்டுமே ஏற்கப்படும்.
 
3. கட்டுரையை தங்கள் தளத்தில் 10/01/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
 
4. பதிவர் அல்லாதவர்களும் எதிர்காலத்தில் வலைத்தளத்தை தொடங்க ஊக்கம் பெறலாம் என்பதால் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். கட்டுரைகளை படமாக (jpg) எடுத்து அனுப்பாமல் யுனிகோடு தமிழ் லதா (Unicode Tamil Font)  எழுத்துருவில் அனுப்ப வேண்டும்.
 
5. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
 
5. உங்களின் தளத்தில் கட்டுரையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : svramani08@gmail.com, rupanvani@yahoo.com, dindiguldhanabalan@yahoo.com, pandi29k@gmail.com
 
நடுவர்கள் :

 
 
பரிசுகள் :
 
முதல் மூன்று பேர்களுக்கு : பதக்கம் + சான்றிதழ்
ஆறுதல் பரிசு ஏழு பேர்களுக்கு : சான்றிதழ்
 
புத்தக பரிசு : நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. அவர்கள் விரும்பும் நூல்களை திரு. முத்து நிலவன் ஐயா அனுப்புவார்கள். அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
சென்ற முறை தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அனுப்பிய சான்றிதழ் உங்கள் பார்வைக்காக :
 
 
 
பெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ் வளர்க்க வாரீர் வாரீர் என்று வரவேற்கிறோம்...! மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்... கருத்திடும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...
 
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

காதல் கடிதங்கள்

வணக்கம்.. வலையுலக உறவுகளே...

                          காதல் கடிதங்கள்


















காதல் கடிதங்கள்
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதையின் முழுவடிவமாக படிக்க  தலைப்பின் மேல் சொடுக்கவும்...

இந்த வலைப்பூவுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்

 

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-