சுமைகள்
சுமந்த வாழ்வுக்கு.!
சுகங்கள்
தேடி தந்தார்கள்!
நம்
மூத்தோர்கள்.!
பெற்ற
சுதந்திரம்!
பெற்ற
உரிமையும் மறுக்கப்பட்டு!
வீதியோரங்களிலும்
நிழல் மரங்களிலும்!
நிம்மதி
இழந்த வாழ்வாக!
வாழ்கிறான்
தமிழர்கள்!
ஆயிரம் கட்சிகள்
ஆயிரம் கொடிகளும்!
ஆரவாரம் செய்ய!
சாதியும் மதமும்
இறுமாப்பு காட்டி!
ஏறுகிறான் சொற்ப
சிம்மாசனம்!
ஐந்து வருடங்கள்!
ஈழத்திலும்
வர்மாவிலும் தமிழனின்!
உயிர்கள் நயவஞ்சகர்களின்
கையில் துடிக்க!
மலாய மண்ணில்
தமிழன் உரிமை மறுக்கப்பட!
தமிழனின் எதிர்காலம்!
மரணக் குழியில்
புதைந்து கிடக்கிறது!
அவலங்கள் கண்டு
துடிக்காத!
தமிழ் தலைமைகள்!
இருந்தென்ன
இலாபம்.!
தமிழ் மக்களே!
பணத்துக்காக,!
அற்ப சுகத்துக்காக
உங்களின்!
உரிமையை விலை
பேசாதீர்கள்!
பொன்னான உரிமையை
மண்ணாக்காமல்!
எதிர்கால சந்ததியின்
வாழ்வுக்கு வழிவிட!
வரும் காலத்தில்
சிந்தித்து.
நம் உரிமையை
செலுத்துவோம்!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-