திங்கள், 8 மே, 2017

நேரில் கண்ட தெய்வம்

அம்மா அம்மா உந்தன் விழிகள் ஈரம்
முதுமையின் கோலம் தெரியுதம்மா
நீ சிந்திய குருதியும் நீ சிந்திய கண்ணீரும்
நினைவுகள் வரும்போது நெஞ்சமெல்லாம்
அனலாக உருகுதம்மா.

இளமைக்கோலத்தில் நீ இருந்த போது.
ஏழ்மையாய் நீ இருந்தாய் அம்மா
இடிதாங்கி வலி தாங்கி உதிரத்தை பாலக்கி
என்னை ஊட்டி வளர்த்த தாயே.

அன்னம் ஊட்டியவள் அறிவுக் கண் திறந்தவள்
ஆயிரந்தான் தவறுசெய்தாலும் அணைத்து எடுப்பவள்
ஆண்டவனிடம் தவமிருந்து உயிர்பிச்சை கேட்பேன்
ஆயிரம் வருடம் வாழவேண்டும் மென்று.என் அன்னை.

ஆண்டவனின் விதியோ. மரணம் வந்து அழைக்க.
கண்ணீர் துவைந்த விழிகளுடன்
ஏக்கம் கலந்த வாழ்வாக
என்நாளும் வாழ்கிறேன் தாயே.
உன் கல்லறை அருகில்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-