சின்ன வயதில் கனவு சுமந்த வாழ்க்கை
சின்னநெஞ்சில் வடம் பிடித்தது
துள்ளித்திரியும் வயதினிலே
தூண்டில் போட்டு விளையாடிய காலங்கள்
துரத்தி துரத்தி அப்பா அடித்த காலங்கள்
கல்லூரிக் காலங்கள் வசந்தகாலங்கள் ஆனது
வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தந்தது.
வாழ்வில் ஒரு சுகந்தம் பிறந்தது.
வாழ்க்கையில் அவலங்கள் மூண்டது
வாழ்வே வெறுத்துப்போனது
தன்நம்பிக்கை தகர்ந்தது.
தாயகம் கடந்தோம் தார்மிக உணர்வோடு
கல்லுரியில் படித்தோம்
கனிவான பண்புடன் ஆசிரியரை மதித்தேன்
தலை குனிந்து நடந்தோன்
தலை நிமிர்ந்து நின்றோன்
படித்த படிப்புக்கு வேலை கிடைத்தது.
பள்ளிக்கூட வாழ்க்கையாய் இருந்தது.
வாழும் உறைவிடம் வேறி இடம்
வேலை கிடைத்தது வேறி இடம்
அறிவில் சிந்த ஆசிரியர்களுடன்
ஒன்றாய் கூடி மகிழ்ந்த காலங்கள்
என் நெஞ்சில் தினம் தினம்
ஞான ஒளி ஏற்றுகிறது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-