வலைத்தளத்தில்
பல வகைப்பட்ட பதிவுகளை எழுதிவரும் மதிப்புக்குரிய கவிஞர் திரு.ரமணி ஐயா இவருடைய வலைத்தளத்தில்
பலவகையான கவிதைகள் உள்ளது ஒவ்வொரு கவிதையும்
படிக்கும் வாசகஉள்ளங்களை நல்வழிப்படுத்தும் வகையில் உள்ளவை. மற்றும் சமுக அவலங்களையும்
தன்நம்பிகை ஊட்டும் வகையில் கவிதையை மெருகேற்றி
எழுதுவதில் வல்லவர்… இவரைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
வலையுலகில் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்னை பொறுத்த வரையில்.பல
வகைப்பட்ட திறமைகளை கண்டு எமது கவிதைக்குழு சார்பாக
எழுத்துலகம் என்று
நின்று விடாது தனது அரச வேலையில் ஓய்வு பெற்ற பின்பு லயன் கழகத்தில் முக்கிய பொறுப்பு
மிக்கவர் இதன் வழி சமுதாயப்பனிகளை தினம் தினம் செய்து கொண்டு வருகிறார். இப்படியான
பணிகளை செய்து வரும் ரமணி ஐயாவுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில்
கவிஞர்.திரு.ச.ரமணி ஐயாவுக்கு
சிந்தனைச் சிற்பி
என்ற தலைபிட்ட.உயரிய
விருதை மலேசியாவின்
தலை நகரான கோலாலம்பூரில் இலக்கிய சந்திப்பின் போது வழங்கி கௌரவித்தேன்.. ஐயாவுக்கு எமது கவிதை குழு சார்பாக வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணி ஐயாவை போல
வலைத்தளத்தில் எழுதி மற்றும் மூன்று நூல்களை வெளியீடு கண்ட மதிப்புக்குரிய பாசமிகு ஐயா. அவர்தான் கவிஞர் திரு. நா.முத்து
நிலவன் ஐயா.
இவரை பற்றி சொல்லிக்கொண்டே
போகலாம் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். இந்துக்களின் பெருநாள் என்றால் இந்திய தொலைகாட்சியை
திறந்தால் போது. நம் வீட்டுக்குள்
வந்திடுவர் அதுதான் ஐயாவின் பட்டடி மன்ற பேச்சு.அத்தோடு நின்று விடாது ஒவ்வொரு பத்திரிக்கையிலும்
சமுகத்தை நல்வழிப்டுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கட்டுரைகளை
எழுதி வருகிறார் அன்று முதல் இன்வரையும்.
அத்தோடு நின்று
விடாது தான் வாழும் ஊரில் எப்படிப்பட்ட சமுதாய பணிகள் நடை பெறுகிறதோ அங்கேயும் காண
முடியும் மற்றவர்களுக்கு ஒரு வழி காட்டி என்றுதான் சொல்ல வேண்டும.எங்கு நீதியின் குரல் நசுக்கப்படுகிறோதோ அவற்றை எல்லாம்
தட்டிக்கேட்கும் மனம் படைத்தவர் இப்படியாக கவிஞர் திரு. நா.முத்து நிலவன் ஐயாவை பற்றி
சொல்லிக் கொண்டே போகலாம்… தனது அரச வேலை ஓய்வு பெற்ற பின்பும் தனது பணியை செம்மையாக
தொடருகிறர்இவற்றை எல்லாம்
கருத்தில் கொண்டு
கவிஞர்.திரு.நா.முத்து நிலவன் ஐயாவுக்கு
(தமிழ் மா மணி )என்ற உயரிய
விருது வழங்கி
கௌரவிக்கப்பட்டுள்ளது…
மலேசியாவின் புகழ்பெற்ற முருகன் கோவில் முன்பாக முது்து நிலவன் ஐயாவுடன் நிற்பவர், நகைச்சுவைத் தென்றல் திரு லியோனி அவர்களின் குழுவில் வந்த இனிய நண்பர் திரு. கோவை தனபால். அவர்கள்
எழுத்துலகில் வெற்றி
நடை போடும் இரு ஜம்பவான்கள் இருவருக்கும் எமது கவிதை குழுவின் சார்பாக உயரிய விருதை வழங்கி கௌரவப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-