புதன், 13 மே, 2015

பாரதி கண்ட புதுமைப் பெண்


ஆங்கில வல்லாதிக்க சக்தியுடன்
வெற்றித் திலகமிட்ட வீர மங்கை
தன்நம்பிகை தளராத மன உணர்வுடன்
வீரவாள் கொண்டு குதிரைப்படை கொண்டு
வெள்ளைக்கரனை புறமுதுகு காட்டி
ஓடஓட விரட்டியவள் பாரதி கண்ட
புதுமை பெண் அல்லவா
அவள்தான்  வீர மங்கை வேலு நாச்சியார்.

அன்று  சொன்னான் சமைக்கும்
கரங்களும் சரித்திரம் படைக்கும்
அதை பூமி பார்க்கவேண்டும்…..என்ற பாடல்
தற்கால யுகத்தில் ஆணுக்கு பெண்
சரி நிகராக வாழும் காலம் கண் முன்னே
கடவுள் சாட்சியாக விரிகிறது.
உழைப்பின் சுகமறிந்த பெண்கள்
இன்று வானளவில்கொடிகட்டிபறக்கிறார்கள்.


வண்ண சேலை கட்டி வலம்வரும்
பெண்கள்.தங்களின் தாய்நாட்டுக்கவும்.

தன்மானத்துக்காவும்
அச்சமில்லை அச்சமில்லை
உச்சி மீது  வானிடிந்த போதிலும்
துச்சமில்லை துச்சமில்லை
தங்களை தாங்கள் அர்(ப்)பணிக்கிறார்கள்.
பித்துப்பிடித்த  சில ஆண்களின்

விந்தையான பார்வையாள்
காம சுகத்துக்கு
கருகி மாண்டவர்கள் எத்தனை.
மூடர்கள் என்று நினைக்கும்
 பெண்கள் -இன்று
மறவர்கள் என வாழும் பெண்கள்
எம் பாரதி கண்ட பெண்கள்.
புதுமைப்பெண்……அல்லவா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 


18 கருத்துகள்:

  1. புதுமைப் பெண்ணின்
    பூந்தேன் கவிதை
    புத்தொளி விசும்
    புவியில் சிறந்து!
    அருமை கவிஞர் அய்யா!
    த ம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  2. புதுமைப்பெண்னின் கவிதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பெண்ணியப்பாடல்! வாழ்த்துகள் சகோ!

    பதிலளிநீக்கு
  4. புதுமையான விளக்கம் புதுமைப் பெண்ணிற்கு அர்த்தம் செறிந்த வார்த்தைகள். பாராட்டுக்கள் ரூபன்

    பதிலளிநீக்கு
  5. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. அருமை
    ரசித்தேன் மகிழ்ந்தேன் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  8. சாதனை படைப்பது ,வண்ண சேலை கட்டி வரும் பெண்கள் மட்டும்தானா ,ரூபன் ஜி :)
    தப்பா அர்த்தம் வருதா ,நான் சொல்ல வந்தது .,சாதனை படைப்பது சுடிதார் கட்டிய பெண்களும் தான் என்று :)

    பதிலளிநீக்கு
  9. அருமை நண்பரே பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்ல வரிகள் வாழ்த்துகள். தமிழ் மணம் காலையில் 5

    பதிலளிநீக்கு
  10. புதுமைப்பெண் கவிதையை....ரசனை சகோ

    தம +1

    பதிலளிநீக்கு
  11. சமைக்கும் கரங்களும்
    சரித்திரம் படைக்கும் - அதை
    பூமி பார்க்க வேண்டும்
    என்ற பாடல் சுட்டி
    நல்லெண்ணங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்!

    பதிலளிநீக்கு
  12. புதுமைப்பெண்ணை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. கவிதையின் வரிகள் அபாரம்.

    பதிலளிநீக்கு
  13. புதுமைப் பெண்கள் சாதனை படைப்பது பெருமையே இனிய சிந்தனை அருமையான கவிதை ரசித்தேன் வாழ்க வளமுடன் .....!

    பதிலளிநீக்கு
  14. அருமை தோழர் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  15. புதுமைப்பெண் பற்றிய கவிதை நன்றாக உள்ளது ..வாழ்த்துக்கள்...

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்