புதன், 6 மே, 2015

கற்பழிப்பு


இன்றைய தினசரி வாழ்வில்
தினசரி பத்திரிகையில்
தினம் தினம் அவலங்கள்
சுமந்த செய்திகள்
தலை விரித்தாடுகிறது.
தையலாள் மண்ணில்
பிறந்தது குற்றமா
அல்லது வாழ்வது குற்றமா.
அன்று பாரதி போற்றினான் பெண்மையை
இன்று இம்மவர் சிதைக்கிறான் பெண்மையை.

 
மலருக்கு பெண்னுக்கும்
சம்மந்தம் உண்டு
மடமை கவிஞர்கள்
போற்றி துதி பாடின அன்று
பெண்ணுக்கும் மண்ணுக்கும்
சண்டைமூன்றது அன்று
ஆணுக்கும் பெண்ணுக்கும்
சண்டை மூண்டு வீதியில்
சிதைவுற்று கிடக்கிறாள் இன்று.


தன் மனைவியை தவிர
மற்றவர்எல்லாம் சொந்தங்கள்
என்று நினையாமல் .
குருதியை குடிக்கும்
காம சுகம் கண்ட பாவிகள் எத்தனை.
நாளுக்கு நாள் செய்தி வருகிறது
நாகரீகம் கெட்டு போகுதையா.
சிந்தனை சிகரத்தை ஏற்றிடுவாய்

 
நல்வழி இளைஞரே.
பாரினில் நாலுபேர் போற்றிட
நல்வழி காட்டிடும் இறைவா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

 

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி நிறைவடைய இன்னும் 9 நாட்கள் உள்ளது தயவு செய்து தங்களின் ஆக்கங்களை மிக விரைவில்அனுப்பிவைக்கும் மாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன்.
...
 
...
 

19 கருத்துகள்:

  1. பெண்மையைப் போற்றுவோம். மனிதம் வளர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  2. பெருமை சேர்க்கும் பெண்மை மேன்மை
    சிறுகவியை அருமை பேச அழைத்தீர் காண்!
    நறுங்கவிதை வீசும் நறுமணத்தை நாடே
    ஒருங்கிணைந்து சுவாசிக்கட்டும்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம 5

    பதிலளிநீக்கு
  3. காலத்திற்கு ஏற்ற கவிதை!

    த ம 7

    பதிலளிநீக்கு
  4. பெண்மையை போற்றாமல் புண்மையை தாங்கிடும்
    புல்லர்கள் தாமிவரோ சொல்...!
    ஆதங்கம் புரிகிறது ரூபன். கடவுள் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்.ரூபன் தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  5. இது பற்றி நானும் ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனம் குமுறுகிறது இத்தகைய செய்திகளைப் படிக்கும்போது. மனிதனாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு. இதற்கு எந்த மருந்தும் இல்லை என்பதுதான் உண்மை. மாதர்களை மதிக்கும் உயர்ந்த குணத்தைப் பெருக்கிக்கொள்வோம்

    பதிலளிநீக்கு
  6. பெண்மையின் பெருமை பேணுவோம்.
    த ம 9

    பதிலளிநீக்கு
  7. இன்றைய நிலைக்கு உகந்த கவிதை...நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  8. பெண்மையை போற்றிய கவிஞரே, தங்கள் கவி அருமை. வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பெண்மையை துச்சமென கருதும் பெரும்பாதகர்கள் ,வாழ் நாளிலேயே தண்டனை அனுபவிப்பார்கள் !

    பதிலளிநீக்கு
  10. பலருக்குப் பாடமாக உள்ள கவிதை. திருந்தட்டும்.

    பதிலளிநீக்கு
  11. இதுபோன்ற நிகழ்வுகள் கவலை அளிக்கிறது.பெண்ணுக்கு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. எச்சரிக்கை அவசியம் நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  12. பல ஆண்களும் , பல பெண்களும் புரிந்து திருந்த வேண்டும்..

    பதிலளிநீக்கு
  13. அன்பர்களே இது போல வரிகள் ஒவ்வொரு இளைஞன் படித்து பயன் பெறுங்கள்.. அன்று பாரதி கண்ட புதுமை பெண்... இன்று ரூபன் கண்ட புத்தம் புது பெண்.... அருமையான வரிகள்... இதையெல்லாம் அரசாங்கம் படித்தால் கூட அசந்து போகும். இரண்டாம் பாரதி என அறிவிக்கும்.... பாடத்திட்டத்தில் உள்ளே புகுந்தால் மீண்டும் இம்மண் வாசனை பெறும் .நன்றி ரூபன் அண்ணா♥♥♥❇

    பதிலளிநீக்கு
  14. இன்றைய அலங்கோலத்தை அழகாக தோலுரித்து காட்டியுள்ளீர்கள் மாறும் என்று நம்புவோம்

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்