வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்


 
கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 14-04-2017தொடக்கம்10-05-2017 

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்

 மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்
 
தலைப்பு-சித்திரை வெயில் வாட்டுதே...
 
 
போட்டியின் நெறிமுறைகள்.

 
1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு  20வரிகளுக்கு மிகாமல் 

எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

 

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

 

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

 

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் 

(இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

 

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

 

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

 

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

 

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது

10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்

11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி 

ootru2@gmail.com

 

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்

இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்

மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்

(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

 

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) 

பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

 

முன்பு நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது… கிடைத்தவுடன் மின்னஞ்சல் செய்யவும்

-நன்றி-

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர்

-கவிஞர்..ரூபன்-

திங்கள், 3 ஏப்ரல், 2017

எல்லாம் உன் கற்பனையே.



என் பஞ்சு மிட்டாயே என் பவளச் செவ்வாயே.
பத்து திங்கள் சேர்ந்திருந்து பாதித்திங்கள் பிரிந்தேனடி.
பாவி மகனை கை பிடித்து பாதிவழியில் நிக்கிறாய்.
பார்த்த உன் பால்முகம் மாறவில்லை.
பாவையே! உன் நினைவெல்லாம் பாலாறாய் ஓடுதடி.,…

வளையல் போட்டஉன்கரம் வளையோசை கேட்க.
கோடி தவம்நானிருந்து கோடைகாலம் காத்திருந்து.
நான் நட்டு வைத்த  மல்லிகையும் நடுமுற்றத்தில் நிக்குதடி.
தோட்டத்து மல்லிகையும் தோரணமாய் தொங்குதடி.
முடியழகில் நீ சூட முடித்து வைக்க யாருமில்லை.

என் அன்னக்கிளியழகி என் அருமை சொல்லழகி
குரலோசை கேட்காமல் குணமெல்லாம் மாறுதடி.
தொலைபேசி எடுத்திருந்தேன் தொல்லைகளை தந்திருந்தேன்.
தொலை தூரம் இருப்பதால் தொல்லைகளும் இல்லையடி.

மசமசத்த  கைமணமும் மாறத சுவையும்
ஊசி மிளகாயும் உள்ளேரெண்டு வெங்காயமும்
பழைய சோறும் பழைய தயிரும்
கலையத்தில் நீ எடுத்து காலையில நீ தந்தா
மாறாத உன் கைமணமும் மனதளவில் நிக்குதடி.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-