என் அத்தை வீட்டு சின்னக் கிளி
நீயே மாமரத்து இளம் குயிலே
மாமன் வரு வான் வென்று.
மல்லிகைப்பூ தலையில் சூடி
மந்தாரப் பொழுதினிலே.
ஒய்யாரம் செய்கிறாய்
ஒற்றை வழி போறேன் னென்று
ஓரக்கண்ணாலே ஒதுங்கி நின்று பார்க்கிறாய்
காதல் வசந்தம் கல்பனா சக்தியாய்
உன் உச்சந்தலையில் ஏற ஏற
என் ஞாபகமே உன் மனக் கடலில்
ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்... தாலாட்ட
நிம்மதியாய் நீவிடும் பெருமூச்சில்
திக்கு தடுமாறும் என் இதயம்
நிம்மதியாய் உறங்கிறதே.
அத்த வீட்டு சின்ன கிளியாலே.
கடல் அன்னையின் மடியில் இருந்து
துள்ளிக் குதித்து ஓடிவரும்அலைகள் எல்லாம்
கரையை வந்து முத்தமிட்டு செல்லுமல்லவா.
அது போல் உன்னை விட்டு நான் பிரிந்து.
நெடு நாட்கள் வாழ்கிறேன். கடல் கடந்த தேசத்தில்.
நீ காட்டும் கருணை உள்ளம்
நீ காட்டும் அன்பு மொழியால்
நான் தினம் தினம் மகிழ்ச்சிக் கடலில் ஆர்ப்பரிக்கிறேன்.
அத்த வீட்டு சின்னக்கிளியாலே...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குறிப்பு
மீண்டும் விருது ஒன்றை எனக்கு உகந்தளித்த
திருமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
முடிவுகள் மிக விரைவில் வெளியாகும்.....