புதன், 30 டிசம்பர், 2015

இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.

நான் துள்ளி விளையாடிய காலங்கள்
நிரந்தரமாய் மௌனித்த நேரம்
வீட்டுத் திண்ணையில் உறவுகள்
சூழ படுத்த படுக்கையில் கிடக்கிறேன்.
உணர்வுகள்  அற்று.சடமாக.

 நான் உயிருடன் இருக்கும் போது
அழகிய பெயர் சொல்லி கூப்பிடஉறவுகள்
நான் மரணித்த பின் சவம் என்ற
பெயரே எனக்கு வைத்து விடுகிறார்கள்.

 நான் வரைந்த ஓவியங்கள்
நான் எழுதிய கவிதைகள்.
நான் செய்த கட்டில் கதிரைகள் எல்லாம்
நான் வேண்டி புதிய கார்
விட்டுவிட்டு தனியாக செல்கிறேன்.

அழகு பார்த்து அழகு பாரத்து நான்
கட்டிய வீடு நான் துள்ளி விளையாடிய முற்றம்
நான் சம்பாரித்த பணம்
என்னை நீண்ட நேரம் வைத்திருக்க முடியாதாம்
ஏன் நான் மரணித்த சவம் என்பதால்.

 மரணம் எனக்கு மட்டுமல்
பூமியில் உயிராக அவதரித்த
ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு.
மரணம் வருமென்று அறிந்தும்
இப்படித்தான் இருக்கிறான் மனிதன்.

புகழ் பணம் எல்லாம் சம்பாரித்தும்
இறுதியில் வருதில்லை.
மனிதனாக வாழும் காலத்தில்
நண்மையை செய்து வாழுங்கள்
உங்களை சொர்க்கத்தில் சேர்த்துவிடும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
27/12/2015 அன்று மலேசிய பத்திரிகை தமிழ் மலரில் வந்த கவிதை

வியாழன், 24 டிசம்பர், 2015

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி.-2016

 
 
தைப்பொங்கல் திருநாள் கவிதைப்போட்டி சம்மந்தமாக விரிவான விளக்கம் பெற
செல்லவும்.
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 23 டிசம்பர், 2015

இதுவரை……… என்ற நூல் பற்றிய விமர்சனம்


 

10-1-2016 தினக்குரலில் வெளிவந்த விமர்சனம்-இலங்கையில்

ஈழத்தில் பிறந்து வளர்ந்த அன்பான உறவு தற்போது புலம்பெயர்ந்த ஈழத் தமிழராக கனடாவில் வாழ்கிறார் அவர்தான் கனடாவில் வெளிவரும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் உரிமையாளரும் திரு.ஆர்.எஸ்.லோகேந்திரலிங்கம் அவர்கள்

புத்தக வெளியீட்டு விழாவுக்காக கனடாவில் இருந்து மலேசியா வந்த போது அவருடைய கை ஓப்பம் இடப்பட்ட புத்தகம் பரிசாக தந்த போது அதை படிக்க நேர்ந்தது.எப்படியான விடயங்கள் இருக்கிறது என்பதை நாம் முதலில் பார்ப்போம் என்றால்.

கனடா உதயன் பத்திரிகையில் தலைப்புக்களை சுமந்த வண்ணம் மிளிர்கிறது. அணுஆயுதம் தாங்கினால் ஒரு எல்லைதான் அழியும் ஆனால் ஒரு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்ற ரீதியில் ஒவ்வொரு தலைப்பும் பல வரலாற்று சம்பவங்களை சொல்லும் அளவுக்கு ஈழத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சம்பங்களையும் ஆண்டுகள் ரீதியில் பட்டியல் இட்டு அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்துக்கும் ஈழ விடுதலை போராட்ட தலைமைக்கும் இடையில் நடைபெற்ற அனைத்து நிகழ்வையும் அழகாக உதயன் பத்திரிகையில் வெளியாகிய தலைப்புகள் இது
இந்த நூலில் காணப்படுகிற அத்தனை தலைப்புக்களும் தமிழ்ஈழ சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்ற எழு ஆண்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.2004.2008.2009.2010.2011.2012.2013.ஆகிய ஆண்டுகளில் எழுதப்பட்டவை ஆனால் ஈழப்போராட்ட சரித்திரத்தை எடுத்துக்காட்டும் வகையில் எழுதப்பட்டவை. அந்தவகையில் சில தலைப்புக்கள் எடுத்துக்காட்டாக

 1.நம்மினம் வீழ்ந்து மடிகிறது சர்வதேசம் வேடிக்கை பாரக்கிறது.(6.03.2009.இல்)
2.நீதியை  தொடரச்சியாக நிராகரிக்கும் உலகம் அநீதியை மட்டுமே நேசிக்கிறது.(16.03.2012.இல்)வெளிவந்தஆசிரியர்  தலைப்பு.

3.நியாயமும் அனியாயமும் மோதிக்கொள்ளும் வன்னி நிலப்பரப்பு.

இப்படியாக ஈழ விடுதலைப் போராட்ட தலையங்கங்களை சுமந்த வண்ணம் இதுவரை….. என்ற நூலில் சொல்லப்படுகிறது.

சரிந்து போயுள்ள ஒரு சமூகத்தை நிமிர்த்தி சரிசெய்வதற்கு.ஒரு அரசியல் வாதியின் மனதில் தோன்றும் சிந்தனையிலும் பார்க்க
ஒரு பத்திரிகையாளனின் உள்ளக்கருத்தாக பதிப்படும்  எழுத்துக்களால் அதிக பலன் ஏற்படும். அதன் மூலம் அந்த பத்திரிகையாளன் சமூகத்துக்குதொண்டு செய்யும் ஒரு உயர்ந்தவன் ஆகின்றான்.
நூலாசிரியர் படம்
நிச்சயம் ஒவ்வொரு தமிழ் பேசும் உறவுகளும் படிக்க வேண்டிய நூல் நிச்சயம் வேண்டி படியுங்கள். உறவுகளே.

புத்தகம் வாசிப்பது ஒரு சுமையல்ல எமது அறிவுகண்ணை திறக்கும் திறவுகோல்.

.இந்த நூலுக்கான  வாழ்த்துரை வழங்கியவர் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் ஐயாவாகும்.

அணிந்துரைவழங்கியவர்.பொ.கனகசபாபதி.
இதுவரை...... நூலுக்கு விமர்சனம்  எழுத கிடைத்தமை எனக்கு மிக்க மகிழ்ச்சி
மலேசியாவில் உள்ள எழுத்தாளர் மார்கரெட் செல்லத்துரை அவர்களுக்கு கொடுக்கும் போது.

























நூல்பற்றிய விபரம்

நூலாசியர்-திரு ,ஆர்.எஸ்.லோகேந்திர லிங்கம்

பதிப்பு ஆண்டு-2013

உரிமை-கனடா உதயன் பத்திரிகை.

வெளியிட்டோர்-கனடா உதயன் பத்திரிகை.

நூலின் விலை-கனடா பணத்தில்-CA$15.00

இந்த புத்தகம் 332 பக்கங்களை கொண்டது

நூல் வேண்டவேண்டுமா.-https://www.facebook.com/naga.logan?fref=ts முகநூலில் தொடர்பு கொள்ளுங்கள்.

வியாழன், 10 டிசம்பர், 2015

பிரிந்த தண்டவாளம்


அடவிக்குயிலே கருவிளம் வண்டே.
காணாமல் பல நாள் சிறையறையில்
பல முறை நேசித்து நேசித்து.
பாழாப் போனது என் வாழ்க்கை.
காயப்பட்ட நெஞ்சம்மதில்
பொங்கி எழும் நீராக ஓடுது -உன் நினைவு
வற்றாத என் குருதியில்
பசுமையை படர்ந்திருக்கு-உன் நினைவு.


அதிகம் அதிகம் நேசித்து.
என் இதயம் மரணித்து போனது.
மரணித்த இதயத்தை
உயிர் கொடுக்க எப்போது நீ வருவாய்.???
விழுதுடன் வளர்ந்த ஆலமரம்
நேற்றடித்த புயலுக்கு சாய்ந்த போல்
வீதியிலே சிதைவற்று கிடக்கிறேன்.
சிறகு முளைத்த என் சின்ன சிட்டே
சிறகெழுந்து பறந்து..வா..?


நேசிக்கும் உன்னை மறப்பதில்லை.
அந்த நேசிக்கும் உயிர்காற்றை.
மறந்தால் வாழ்வில் மரணமே
நீ எந்த தேசத்தில் இருந்தாலும்
நிம்மதியாய் நீ தூங்கி எழும்
காதலர்கள் அழிந்தாலும்
நம் காதல் அழிவதில்லை
வரலாறு எப்போதும் பொய்பதில்லை
விடியல் மலரும் போது.
என் மரணத்தில் நீ கண் விழிப்பாய்.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் உள்ள தினகரன் பத்திரிகையில்வெளியாகிய கவிதை பார்வைக்கு இதோ.

புதன், 2 டிசம்பர், 2015

வானம் அழுததால் இந்த நிலை.

கடலும் வானும் பூமியும் அழுது
ஏழையின் வீட்டை ஏழ்மையாய் பதம் பாக்க
இரவும் பகலும் கண் விழித்து.
ஏக்கம் கலந்த தூக்கங்களும்
ஏழ்மை வாழ்வை புரட்டி போட்டு.
வீதியின் நடுவே மின் விளக்கில்லாமல்
இரவில் விடியலை தேடுகிறோம்.



வியர்வை சிந்திய நட்ட பயிரும்
கடன் வேண்டி விதைத்த நெல்லும்
விழலுக்கு இறைந்த நீர் போல.
வாரி அள்ளிச் சென்றதுவே.
அடை மழையின் கண்ணீரால்
மழை வெள்ளம் வந்ததுவே.
மாரி காலம் வந்தால்
வறுமைப் பஞ்சம் வந்திடுமே.

நித்தம் நித்தம் பள்ளி சென்று
கல்வி கற்கும் எம் பிள்ளைகள்
அடை மழையால் பள்ளிதனை இழந்து.
வல்ல வெளிச் சாலையிலே.
உணவின்றி வறுமையில் வாடுதப்பா.
நல்ல மனம் படைத்த
கொடை வள்ளல்களே
சாதி மதம் பாராமல்
கருணையுள்ளம் காட்டி
மழையில் துவன்டோரை
கரை சேர வழி காட்டுங்கப்பா.










































29-11-2015 அன்று தமிழ் மலேசியாவின் தேசிய நாள் ஏடு மலரில் வந்த எனது கவிதை

-நன்றி
-அன்புடன்-
-ரூபன்-