எண்ணக்கவியோடு
ஏழைகளின் மனதோடு
நின்று
உறவாடும் செந்தமிழ் புலவரே
சொந்த
தமிழில் செந்தமிழ் பாடி
அகிலம்
வாழும் தமிழர் மனங்களில்
நிறைந்த
முழுமுதல் கவிஞரே.-நீ வாழ்க.
சில மணி நேரம் உன்னுடன் பழகிய காலங்கள்
என்
வாழ்வின் இளவேனிக்காலங்கள்
இயல்
இசை நாடகம் என்ற முக்கலையும்
வளர்க்கும்
சங்கத் தமிழின் அவைச் சான்றோரே
உன் பேச்சு அகிலமெல்லாம் இனிக்குதையா
ஆசானாய் கவிஞனாய் அவைபேச்சாளனாய்
ஏழைகளின் தோழனாய்
மாந்தர்களின்
அகவை
நிறைவை ஆயிரம் உறவுகள் கூட்டி
அவனியில்
வலம் வரும் உனக்கு
ஆயுள்
முழுதும் அண்டவன் அருள் புரிவான்.
தமிழுக்காய்
நீ வாழுகிறாய்
உன் புகழ் தரணி எங்கும் பூபாளம் பாடுதையா. ஆசானாய் கவிஞனாய் அவைபேச்சாளனாய்
மனங்களில் நிறைந்தவனே.
வாசு தேவன்
நாமம் பெற்ற உன்னை.
அகவை நிறைவில்
ஆயிரம் கவிஞர்களின்
வாழ்த்துக்கவிதையில்
நனைய
இந்தச் சான்றோனும்
வாழ்த்துகிறேன்.
நன்றி
அன்புடன்
த.ரூபன்