நற்தமிழே
நாவூறும்செந்தமிழே
நாம்
கற்கும் பைந்தமிழே
இந்தனைக்கும்
நீ வாழ
தரணியிலே
உன் புகழும்.
கண்மணிகள்பிறந்து
விட்டால்
கற்பனையாய்
தாலாட்டும்
நம்
தமிழின் செந்தமிழை
கேட்டாலே
உள்ளமெல்லாம் தேனூறும்
இணையத்தில் தமிழே
இணையற்ற
உன் புகழே
கோடி தமிழர்கள் உச்சரித்தால்
உன் சுவையே மாறாது
பன்னிரெண்டு உயிரெழுத்தும்
பதினெண் மெய்எழுத்தும்
ஆயுத எழுத்துமாய்
உயிர் மெய்யாய் நீ நின்று
கோடி தமிழர்கள் உச்சரித்தால்
உன் சுவையே மாறாது
பன்னிரெண்டு உயிரெழுத்தும்
பதினெண் மெய்எழுத்தும்
ஆயுத எழுத்துமாய்
உயிர் மெய்யாய் நீ நின்று
பல வகை சொற்களும்
உன்னிலிருந்து
மலர்கிறது.
உன் புகழே அகிலமெல்லாம்
இன்னிசை பாடுது
தமிழே
ஆயிரம் மொழிகள் தோன்றியும்
அழியாமல் நிக்குது
நம் மொழி
உதிரத்தில்
பிறந்த மொழி
உள்ளத்தில் வளரும் மொழி
ஆயிரம் வணக்கம்
சொல்வோம்
அகிலத்தின்
மொழியாய்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-