திங்கள், 11 ஜூலை, 2016

ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர்21-5-2016


ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-21-5-2016

மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில்  சிரம்பான் என்ற இடத்தில் அமைந்துள்ள தமிழர்களின் கலாசார மண்ணடபத்தில் இனிய நந்தவனம் பதிப்பகமும் தடாகம் இலக்கிய அமைப்பு –இலங்கை ஸ்ரீமுகவரி அறவாறியம்  இணைந்து நடத்திய நிகழ்வு.



இறைவணக்கத்துடனும் பொதுச்சுடர் ஏற்றும் நிகழ்வுடன் நிகழ்வு ஆரம்பம்மானது கனடா உதன் பத்திரிக்கை பிரதம ஆசிரியர் தலைமை வகிக்க மலேசியா எழுத்தாளர்சங்க தலைவர் மன்னர் மன்னர் முன்னிலை வகிக்க .லண்டனை வசிப்பிடமாக கொண்ட திரு. குலேந்திரன்  மியன்மார் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் திரு.க.முனியாண்டி இலங்கை எழுத்தாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  இந்தியாவை சேர்ந்த பாரதி வாணர் சிவா. கவிஞர் பழம் முக்கனி பழனியப்பன் ஆகியோரின் வாழ்த்துரையுடன்


புலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால இலக்கிய போக்கு என்ற தலைப்பில் கட்டுரைகளும் கருத்து பரிமாற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து.

கவியரங்கம் நடைபெற்றது இந்த கவியரங்கத்துக்கு மலேசிய கவிஞர் தமிழ் கனல் குப்பு சாமி தலைமை வகிக்க இந்தியா இலங்கை மலேசிய கவிஞர்கள் கவிபாடினார்கள். கவியரங்கம் நிறைவு பெற்றது. பின்பு கவிதை பாடியவர்களுக்கு இலக்கிய கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு  நினைவுச்சின்னமும் சான்றிதழும் வழங்ப்பட்டது.

நூல் வெளியீட்டு நிகழ்வு-

அதன் பின்பு பி.ப. 3.00 மணிக்கு கோலாலம்பூர் தலைநகருக்கு அருகாமை அமைந்துள்ள நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அமைந்துள்ள மலேசிய இந்தியன் காங்கிரஸ் பொது மண்டபத்தில் நடை பெற்றது வரவேற்புரையை மைக்கல் வீமன் வழங்க

மலேசிய நாட்டை சேர்ந்த தொழிலதிபர் துவான்.V.P.ராஜா தலைமை வகிக்க இனிய நந்தவனம் பதிப்பக ஆசிரியர் நந்தவனம் சந்திர சேகர் முன்னிலைவகிக்க  சிறப்புரையை கனடா உதன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர்  ஆர் எஸ்.லோகேந்திர லிங்கம் வழங்க நூல்வெளியீடுகள் நடை பெற்றது.


முதலாவது நூலாக ஈழத்தை சேர்ந்த கவிஞர் த. ரூபன் எழுதிய (ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு நடை பெற்றது இந்த நிகழ்வின் போது கவிமாணி என்ற பட்டம் தந்து பன்னாட்டு எழுத்தாளர்கள் முன்னிலையில்  கௌரவிக்கப்பட்டது. முதல்  பிரதியை நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் திரு ஆ.செல்லத்துரை பெற்றுக்கொண்டார்


இரண்டாவது நூலாக ஈழத்தை பிறப்பிடமாகவும் யேர்மணியை வசிப்பிடமாக கொண்ட திருமதி சந்திர கௌரி சிவபாலன் அவர்களின் முக்கோண முக்குளிப்பு என்ற கட்டுரை நூலும்

மூன்றவது நூலாக ஈழத்தை பிறப்பிடமாக கொண்ட திருமதி சிவரமணி அவர்களின் அவள் ஒரு தனித்தீவு என்ற சிறுகதை  போன்ற நூல்கள் வெளியீடு காணப்பட்டது.

 நிகழ்ச்சியை ஈழத்தை சேர்ந்த கவிஞர் த.ரூபன் தொகுத்து வழங்க

இந்தியாவை சேர்ந்த செல்வி .நிவேதா சிவனேசனின் பரதநாட்டியத்துடனும் கவிஞர் த. ரூபனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி மாலை 7.30 மணியல்வில் நிறைவு பெற்றது.

சிங்கப்பூர் நிகழ்வு-24-5-2016

அதன் பின்பு 24ம் திகதி சிங்கப்பூரில் உள்ள தமிழ் எழுத்தாளர்களும் இந்தியா எழுத்தாளர்களும் கனடா .குவைத்த போன்ற நாடுகளை சேர் எழுத்தாளர்கள் பங்குகொண்டார்கள் நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு இனிதே தொடங்கியது. நிகழ்வில் தலைவகித்தவர் ரெ.செல்வராசு (சிங்கப்பூர் தமிழர் இயக்க தலைவர்) முன்னிலை இனிய நந்தவனம் பதிப்பக ஆசிரியர் திரு சந்திர சேகரன் அவர்களும். வாழ்த்துரை வே. தவமணி (சிங்ப்பூர் தமிழர் இயக்க ஆலோசகர்) சிங்ப்பூர் தமிழ் பாடசாலை ஆசிரியர் ஜகூர் உசேன் அவர்களின் வாழ்த்துரையுடனும் ஏற்புரையை கனடா உதயன் பத்திரிக்கை ஆசிரியர் ஆர் எஸ் லோகேந்திர லிங்கம் வழங்க வரவேற்புரையை சிங்கப்பூர்  தமிழர் இயக்க செயலாளார் திரு நாராயணசாமி வழங்கினர் அதன் பின்



 கனடா உதன் பத்திரிக்கை பிரதம அசிரியர் திரு ஆர் எஸ்.லோகேந்திர லிங்கம் அவர்களின்  இதுரை நூலும்

ஈழத்தை சேர்ந்த கவிஞர் த. ரூபனின் ஆயுதப்பூ சிறுகதையும் அறிமுகமாகின பிரதிகளை பெற்ற பின்பு கவிஞர் த. ரூபனின் நன்றியுரையுடனும் செல்வி நிவேதா அவர்களின் பரத நாட்டியத்துடன்  இனிதே நிறைவு பெற்றது. அதன் பின்பு இரவுநேர விருந்தோம்பல் இடம்பெற்றது சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தினால்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-