செவ்வாய், 23 ஜூன், 2015

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் முடிவுகள்-2015


வணக்கம்
வலையுலக உறவுகளே.
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு ரூபன் யாழ்பாவாணன் இணைந்துநடத்திய கவிதைப்போட்டி முடிவுகள் இதோ. எல்லாப் போட்டியாளர்களும் தங்களின் படைப்புகளை மிக அருமையாக எழுதியுள்ளார்கள் . வெற்றி தோல்வி என்று பாராமல் எழுத வேண்டும்மென்ற  எண்ண உணர்வு வளர்வதைப்பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். போட்டியில் பங்குபற்றிய படைப்பாளிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

இந்த காலத்தில் எவ்வளவு  வேலைப்பளுக்கு மத்தில் மிகவும் நேர்த்தியாக முத்து மணிக்கவிகளை தெரிவு செய்த நடுவர்களான

கவிஞர் சிந்தனைச் சிற்பி-திரு ரமணி ஐயா
கலாபூசணம் திரு .வே.தங்கராசா ஐயா
வலைச்சித்தர்-திரு பொ.தனபாலன் –அண்ணா

ஆகிய மூவருக்கும் போட்டி நடத்துனறான ரூபன்&யாழ்பாவாணன் ஆகிய இருவரும் நன்றிய கூற கடமைப்பட்டுள்ளோம் அத்தோடு போட்டி நடாத்த வேண்டும் என்ற உணர்வை விதைக்கும் எங்களின் நிருவாக குழுவுக்கும் எனது நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அத்தோடு பல வகையில் பல நல்வழி காட்டும் சகோதரி மூத்த எழுத்தளார் கவிஞர் என்று அழைக்கப்படும் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  தடாகம் மின்வலையை ஆசிரியரும் அவரே அவர்களுக்கும் போட்டி நடத்துனறான ரூபன்&யாழ்பாவாணன் ஆகிய இருவரும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்

ஆறுதல் பரிசு பெற்றவர்கள்
அ.இனியா
டி.என் .முரளிதரன்
R..ராஜா
மணவை ஜேம்ஸ்.
G.ரவி
எஸ். பழனிச்சாமி
வாரதி

காலம் தாழ்த்தாமல் வெற்றி பெற்றி போட்டியார்களுக்கு தபால் வழி பரிசு வழங்க உள்ளதாள் தாங்களின் சரியான முகவரியை rupanvani@yahoo.com
என்ற முகவரிக்கு அனுப்புமாறு தயாவக வேண்டிக்கொள்கிறேன்.
வெற்றி பெற்ற கவிதைகள் மிக விரைவாக யாழ்பாவாணன் வலைப்பூவில் PDFவடிவில் தரவேற்றப்படும் என்பதை நான் அறியத் தருகிறேன்.
மீண்டும் அடுத்த போட்டியில் சந்திக்கலாம் விரைவில்

இந்தியாவில் இருந்து வெளிவரும்  பத்திரிகையான இனிய நந்தவனம் என்ற இதழில் எனது நேர்காணல்.
இந்தியா.மலேசியா.சிங்கப்பூர். ஐரோப்பா நாடுகளில் வெற்றிநடைபோடும் பத்திரிகை..இது இனிய நந்தவனம் பத்திரிகைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


 

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 18 ஜூன், 2015

இலங்கையில் உள்ள வசந்தம் தொலைக்காட்சியில் நான்

இலங்கையில் இரண்டு முறை சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதினை பெற்ற வசந்தம்  தொலைக்காட்சியில் என்னைப்பற்றிய அறிமுக உரையும் மற்றும் எனது வலைப்பூக்கள் பற்றியும் தூவானம் நிகழ்ச்சியில் அடையாளம் என்று தலைப்பிட்டு காட்டியுள்ளார்கள் 13-06-2015 அன்று அந்த வீடியோவை கண்டு மகிழவும்
 





புதைக்கப்பட்ட வாழ்க்கை


வாழ்வில் புதிய விடியல் தேடி

வாழ்வை உயர்த்த சென்றவள்

பாலுக்கு அழும் பிஞ்சு குழந்தையை

கை விரல் பிடித்து நடந்து செல்லும் சேய்

 
செல்ல மகனையும் அன்பு கனவனையும்

அருவியாய் கொட்டும் கண்ணீருடன்.

பாசத்தை நெஞ்சில் சுமந்தவண்ணம்

ஆகாய விமானத்தில் பறக்கிறாள். அரபு தேசம்

 
பாலைவனக்காற்று. பதம் பார்க்க

பாலைவன வெம்மையில் பொறிகிறாள்

அழும் பிஞ்சு குழந்தைக்கு.

அழுதமாய் கொடுக்கும் பால்சுரக்க.

 

பாலைவன மண்ணில் வீச்சுகிறாள்

தாய் பாசம் பாலைவன மண்ணில் புதைகிறது.

அவளின் நெஞ்சு குழிக்குள்  ஏங்கி தவிக்கும்

பிள்ளை மனம் அரபு தேசத்தில் தீச்சுடர்ராய் எரிகிறது

 
காலங்கள் கடக்க. அவள் வாழ்வில்

சுகந்தங்கள் வீசவில்லை.

வீட்டுக்கார முதலாளி கொடுமை

வாய் விட்டு சொல்ல முடியாத துன்பம்

 
நான்கு சுவர்களுமே. அவளின் உலகம்

உருண்டு புரண்டு படுத்தாலும்

துங்கம் களையாத வழிகளுடன்

குடும்பத்தை சுமந்த வண்ணம்

 
நன்னீர் என்னும் வென்னீரில் வேகுகிறாள்

அரபு தேசமே ஆர்ப்பரிக்கும் கடலலையே

ஆண்டவன் போட்டது தண்டணையா

இல்லை அவளே தேடிக் கொண்ட தண்டனையா.
 
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு நடத்திய கவிதைப் போட்டி முடிவுகள் மிக விரைவில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்

வியாழன், 11 ஜூன், 2015

யுத்தத்தின் நடுவில் ஒரு காதல்......



கிழக்கின் கரையோரம் கீழ் வானில் ஏழு நிறங்கள் வளைந்து இசை பாடும் வானவில்லின் அழகும் .மேகங்கள் ஒன்றுடன்ஒன்று மோத. கதிரவன் ஒளிக்கீற்று பூமியெங்கும் பரவ மாநிறம் கொண்டு வளைந்தாடும் மங்கையின் வதனம் சனக் கூட்டத்துக்குள் என் கண்ணுக்கு தெரிந்தது .அவள்தான் என் மாலினி.

ஓடி விளையாடும் பிஞ்சுகள் .வயதில் முதிர்ந்த தாத்தாக்கள் நெஞ்சை பிடித்த வண்ணம் ஓலமிட்டு திரிகிறார்கள். விமானங்களின் இரைச்சல் சப்தங்களும் அங்கும்.இங்கும் குண்டுகளின் சப்தங்கள்,கேட்ட வண்ணம் இருந்தது,

மூட்டை மூட்டையாய் துணிகளும் மூட்டை மூட்டையாய் சமையல் பாத்திரங்களையும் தலையிலும் தோளிலும் சுமந்த வண்ணம் படுத்துறங்க கையில் ஓலைப்பாயுடனும் தன் ஊர் சொந்தங்களுடன் இடம் பெயர்ந்து போகிறாள்..
குண்டுகளின் ஆணவத்  தாண்டவம் அவள் உடல் எங்கும் பதம் பார்த்தது. அவள் இரத்தம் துவைந்த உடையுடன் அழுத குரலுடன் தன் காதலனை பார்க்க வேண்டும் என்ற மன ஏக்கத்துடன் தன்னால் முடிந்தளவு அவள் போராடி ஒரு தன் நம்பிக்கையுடன் ஒரு பக்க கரையை அடைகிறாள்
அவள் பாதுகாப்பாக கரை ஒதுங்கிய இடத்தில் சிறு சிறு தார்ப்பாய் குடிசைகள் குனிந்து நிமிர முடியாதவாறு அந்த குடிசை அமைந்துள்ளது அவளின் சிந்தனை தன் உடம்பில் உள்ள குண்டுக் காயங்களை பற்றியோ, அல்லது அவள் வாழும் சின்னக் குடிசை பற்றியோ அல்ல.
அவள் உயிருக்கு உயிராக மனசார நினைத்த காதலன் (ஆனந்தன் )பற்றிய நினைவுதான் அவள் நினைவில் கடல் அலை கல்லில் மோதுவது போல அலையலையாய் ஓடிக் கொண்டிருந்தது ஆனந்தின் நினைவு
 அவள் தனிமையில் இருந்து யோசிக்கும் போது தன்னுடன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மல்லிகா வந்து.
" என்ன பிள்ளை எப்ப பார்தாலும் ஏதோ யோசிக்கிறாய்,,,,,,,,,,,, என்று கேட்டாள் மல்லிகா"
அதற்கு மாலினி சொல்லுகிறாள்,,,,,,,,,,,,,,நான் உயிருக்கு உயிராக நேசித்த என் (ஆனந்தின் ) நிலை என்னவென்று தெரியாது அவனைப் பற்றிய நினைவுதான் என்  நெஞ்சை  பிசைந்து எடுக்கிறது .சகோதரங்கள் அம்மா அப்பா எல்லோரும் இறந்தாங்கள் அந்த கவலை எனக்கு பெரிதா தெரியா வில்லை என் காதலன் (ஆனந்தன் .) பற்றிய கவலைதான் எனக்கு பெரிதாக தெரிகிறது என்று பதில் கூறினாள்,,,பின்பு
என்ன இறைவா இந்த சோகத்தையும் வேதனையும் ஒன்றாக என் வாழ்வில் அனுபவிக்க விட்டாயா? என்ற கேள்விக் கணையை தன் மனதுக்குள் தொடுத்தாள்.
குடிசையில் வாழும் மக்களின் வாழ்வு நிலை ஒரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது பின்பு (மாலினி) தன் காதலன் (ஆனந்தை) தேடும் பயணத்தை தொடர்கிறாள் அவள் ஒவ்வொரு இடைத்தங்கல் முகாமாக அவன் முகவரியை கையில் பிடித்த வண்ணம் அலைந்து திரிகிறாள் பல உயர் அதிகாரிகளை சந்தித்து என் வாழ்வில் இழக்க முடியாத என்ன உறவுகளை இழந்தேன் அந்த வேதனை ஒருபக்கம் இருக்க
என் காதலன்(ஆனந்தத்திற்கு) இந்த நிலையா என்ற வினாவினை பேசுகிறாள். என் ஆனந் எப்படியாவது தேடி எடுத்து தாருங்கள் என்று கெஞ்சி மன்றாடினாள் அதற்கும் பதில் கிடைக்க வில்லை
பல மாதங்கள் கடந்த நிலையில் தேடித்தேடி அலைந்ததுதான் மிச்சம் அவளால் கண்டு பிடிக்க முடியாமல் போனது,,,,,
மாலினி) யுத்தத்தால் தன் உடமைகளை இழந்தவள் அதே நேரம் அவளுடைய அடையாள அட்டையை யுத்தத்தில் இழந்தாள் அவள் தன்னுடைய அடையாள அட்டை எடுப்பதற்காக அடையாள அட்டை பெறும் திணைக்களத்துக்கு செல்லுகிறாள்.
அங்குள்ள அதிகாரியிடம் அவளின் விபரங்களை ஒப்படைத்து விட்டு அங்கு அவள் வரிசையாக நின்று சில மணி நேரத்துக்குப் பின்பு அடையாள அட்டை கிடைத்தது அதை வாங்கிய வண்ணம் வீதியோரமாக சோகம் கலந்த முகத்துடன் போகும் போது எதேச்சையாக (ஆனந். வாருகிறான் என் ஆனந் மாமா )என்று பெரிய சந்தோச அழுகையுடன் கட்டிப்பிடித்தாள் பின்பு (ஆனந்தன் ) தன் அம்மாவின் வீட்டுக்கு அழைத்துச்  சென்றான் பாசங்களை மாறி மாறி பகிர்ந்தார்கள் மாலினியின் மீது ஆனந்தன் குடும்பம்.அளவு கடந்த அன்பு வைத்தவர்கள்
மாலினியின் வாழ்க்கையில் யுத்தத்தில் பட்ட துன்பத்தை விட தன் காதலனை அடைய வேண்டும் என்ற ஒரு எழுச்சின் வடிவம் அவள் மனதில் காதல் ஒரு போராட்டமாக மாறியது அவள் இறுதி வரை போராடினாள் கடைசியில் அவள் தன் காதலில் வெற்றி வாகை சூடினாள் மாலினியைப் போன்ற பெண்கள் எத்தனை பேர் காதலுக்காக போராடி வெற்றியடைந்த பெண்களும் உள்ளார்கள் அதே போன்று காதலுக்காக வாழ்வில் போராடிக் கொண்டு இருக்கும் பெண்கள் எத்தனை பேர் அவர்களின் காதலும் வாழ வேண்டும் காதல் வாழ்க காதல் வாழ்க,,,,,,காதல் வாழ்க,,,காதல் வாழ்க
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
10-06-2015 புதன்கிழமை தமிழ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான எனது சிறுகதை.