ஞாயிறு, 29 டிசம்பர், 2013

புதுவசந்தம் தந்திடுவாய் புத்தாண்டே

Rainbow Text - http://www.myrainbowtext.com


அம்மா அப்பா தம்பி தங்கை.அண்ணா
என்ற பாச உறவுகளுடன் –கூடி மகிழ்ந்த வீடல்லவா.
சுற்றி திரிந்தோம் திண்ணைகளில்.
சுகமாய் இருந்தோம் – அப்போது.
அன்பும் உறவும் சூழ்ந்திடவே.
சுகமாய் இனிதாய் இருந்த வீடல்லவா.
முன்பு மூடிய சுவருடன் உள்ளது -எங்கள் வீடு
இப்போ திறந்த வெளிதனில்
ஒற்றை சுவருடன் நிக்கிறது
வீட்டை சுற்றி பூஞ்செடி வைத்து
நந்தவனம் போல இருந்த வீடு.
இப்போ பாலைவனமாக இருக்கிறது.
எங்கள் குடும்பத்தில் உள்ள கல்விமான்கள்
அத்தனைபேரும் பிறந்து வளர்ந்து
 படித்த வீடு- இதுஅல்லவோ.
வீட்டை உருவாக்கா என்அப்பா என் ஆத்தால்
என்ன வியர்வை சிந்திருப்பார்கள். ??
எங்கள் வீட்டிடைப் பாரும்
பட்ட துன்பம் அழகாய் தெரியும்
புத்தாண்டே நீ வந்திடுவாய்
எங்கள் வீட்டில் நாங்கள் –வாழ்ந்திட
வாழ வழி செய்யும்-எத்தனையோ
மனிதப் பிறவிகள் துன்பத்தில் –வாடுகிறது.
அவர்கள் வாழ்விலும் எங்கள் வாழ்விலும்
புது இல்லங்களில் புகுந்திட
புது வசந்தம் வீசிடுவாய்..புத்தாண்டே

கொட்டும் பனியிலும் கொட்டும்-மழையிலும்
குடும்பத்தை பிரிந்து தன் குடும்பத்தை விட
நாடே நமக்கு மேலானது என்று எண்ணியபடி.
உள்ளக் கிடக்கையில் உணர்வுகள் தேங்கி நிக்க
இரவு பகல் விழித்து. நாட்டு எல்லைப்புறத்தில்
காவல் காக்கும் வீரர்கள் எத்தனை.
நாட்டுக்கு நாடு நடைபெறு யுத்தத்தை
மலருகிற புத்தாண்டில் அமைதியாக்கிடுவாய்.-புத்தாண்டே.
துன்பப்படும் மக்களுக்கு புதவசந்தம் வீசும்-புத்தாண்டே
நாட்டுக்கு உழவே தலைசிறந்து என்று
எண்ணியபடி அல்லும் பகலும் வியர்வை-சிந்தி
எண்ணிய சிந்தனையில் ஏர்பிடித்து
நிலம் உழுதும் விவசாயின் வாழ்க்கையில்.
வரலாறு கானாத.விளைச்சளை –அள்ளி
கொடுத்துடுவாய் புத்தாண்டே.
புத்தாண்டே நீவருக.
எங்கள் வாழ்வில் புதுவசந்தம்-தந்திடுவாய்
 
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


11 கருத்துகள்:

  1. உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
  2. தங்கள் புத்தாண்டு வேண்டுதல்கள் அனைத்தும்
    தொடர்ந்து நிலைத்து நிறைவேற
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கவவிதை நெஞ்சைக் கனக்க வைக்கிறது அன்பரே! கண்டிப்பாக நாடு கடந்து வாழும் மக்களுக்காக நாம் எல்லோரும் இந்தப் புத்தாண்டில் வேண்டுவோம்!

    //எங்கள் வீட்டிடைப் பாரும்
    பட்ட துன்பம் அழகாய் தெரியும்
    புத்தாண்டே நீ வந்திடுவாய்
    எங்கள் வீட்டில் நாங்கள் –வாழ்ந்திட
    வாழ வழி செய்யும்-எத்தனையோ
    மனிதப் பிறவிகள் துன்பத்தில் –வாடுகிறது.
    அவர்கள் வாழ்விலும் எங்கள் வாழ்விலும்
    புது இல்லங்களில் புகுந்திட
    புது வசந்தம் வீசிடுவாய்..புத்தாண்டே//

    புத்தாண்டு துன்பப்படும் எல்லாரது வாழ்விலும் புது வசந்தம் வீசிடட்டும்!

    நல்லதொரு படைப்பு அன்பரே!! வாழ்த்டுக்கள்!!

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடன்
    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  4. கவவிதை நெஞ்சைக் கனக்க வைக்கிறது அன்பரே! கண்டிப்பாக நாடு கடந்து வாழும் மக்களுக்காக நாம் எல்லோரும் இந்தப் புத்தாண்டில் வேண்டுவோம்!

    //எங்கள் வீட்டிடைப் பாரும்
    பட்ட துன்பம் அழகாய் தெரியும்
    புத்தாண்டே நீ வந்திடுவாய்
    எங்கள் வீட்டில் நாங்கள் –வாழ்ந்திட
    வாழ வழி செய்யும்-எத்தனையோ
    மனிதப் பிறவிகள் துன்பத்தில் –வாடுகிறது.
    அவர்கள் வாழ்விலும் எங்கள் வாழ்விலும்
    புது இல்லங்களில் புகுந்திட
    புது வசந்தம் வீசிடுவாய்..புத்தாண்டே//

    புத்தாண்டு தங்களது வாழ்விலும், எல்லாரது வாழ்விலும் புது வசந்தம் வீசிடட்டும்!

    நல்லதொரு படைப்பு அன்பரே!! வாழ்த்டுக்கள்!!

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடன்
    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  5. வரும் ஆண்டு மேலும் சிறப்பான அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    முடிவில் "தட்டச்சு" அசத்தல்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  6. மனதைத் தொட்ட கவிதை.....

    உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. இந்த இடுகைக்கு இட்ட பின்னூட்டம் வந்ததா என்று தெரியவில்லை ! நண்பரே!!

    பதிலளிநீக்கு
  8. வீட்டின் நிலையை பார்க்கும்போது வருத்தம் சூழ்கிறது.நல்ல காலம் பிறக்கும் புத்தாண்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. கவிதையும் வீடும் மனம் கனக்க வைக்கிறது...நல்ல காலம் விரைவில் வர வேண்டி இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்