திங்கள், 12 நவம்பர், 2018

கோலங்கள் மாறிய கலாசாரம்



கல்லில் அடிபட்ட மாங்கபோல
கசக்கி புளிந்த புளியம் பழம் போல
விதைகள் தெரிய சதைகள் கிழிய
நவ நாகரீகம் என்ற பெயரில்
அசிங்கமான உடை
குட்டப்பாவடை
நவீன யுவதிகள் பக்கம்
-------

பாட்டன் பூட்டன் கற்றுத் தந்த
கலாசாரத்தை மண்னோடு புதைத்து விட்டு
மனித நாகரீகம் என்ற போர்வையில்
மனிதம் மனிதத்தை மாசுபடுத்தி
வாழ்கிற வாழ்க்கையாக மாறிவிட்டது.இன்று
-------

அன்று ஒரு காலத்தில் பெண்ணால்
பெண்மையை போற்றி வாழ்ந்தாள்
இன்றைய நாகரீகம் என்ற போர்வையில்
அரை தெரிய உடையும்
ஆடை என்ற போர்வையில்
உடல் தெரிய அங்கவஸ்திரமும்
ஆடம்பர வாழ்க்கையாக மாறிவிட்டது.
--------
அப்பா அண்ணா சொந்தங்கள்
என்ற உறவு இருப்பதை மறந்துவிட்டு 
கவர்ச்சி உடையை அணிந்து.
ஆண் வர்க்கத்தின் மனநிலையை
பல திசைகளில் திசை திருப்பி
பெண்மையை சீரழித்ததும்
கலாசாரம் என்ற போர்வையில்
வலம் வரும் அரை குறை ஆடைகள்தான்.
--------
நிர்வாணம் என்பது அழகானது..
அது என்றும் கவர்ச்சியை தூண்டுவதில்லை.
இதை பூர்வீகக் குடிகளில் அவதானித்திருப்போம்.
நாகரீகம் என்ற போர்வையில்
வரும் அரை குறை ஆடைகள்தான்
பாலியல் கவர்ச்சியை தூண்டுகிறது
-------
நவீன உடை என்ற போர்வையில்
கலாசாரத்தை சீரழிக்க பவனிவரும்
ஆடைகளை தூக்கிப் போட்டு விட்டு
தமிழன் தமிழச்சி என்ற கலாசாரத்தையும்
நம் பண்பாட்டையும் சொல்லும்
உடைகளை வாங்கி
நம் இளைய சமூகத்திற்கு வழிகாட்டி
அன்பான தமிழனாய் வாழ்வோம்.

-நன்றி-
-அன்புடன்-
த.ரூபன்

7 கருத்துகள்:

  1. இன்றைய அவலநிலையை அழகாக சொன்னீர்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. அருமையான எண்ணங்களை
    அழகாகப் பாப்புனைந்தீர்
    தொடர்ந்து வலைப்பக்கம் வருக.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய கலாச்சார மாற்றத்தை அழகாகச் சொல்லிட்டீங்க ரூபன்..

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  4. இன்றைய கலாச்சார மாற்றம் ...
    Blogspot வலைப்பக்கம் வருக.

    பதிலளிநீக்கு
  5. கேவலம் .... இன்று அவலம் உலகை வலம் வருகிறது. கவலை வேண்டாம் பண்பாடு இத்திருநாட்டில் மீண்டும் பண்படும் !!!.
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்