வியாழன், 19 ஜூன், 2014

சிறகடிக்கும் நினைவலைகள் -பகுதி-5






சிறகடிக்கும் நினைவலைகள் என்ற தலைப்பில் உள்ள ஒவ்வொன்றையும் படிக்க முதலில் இங்கே சொடுக்கவும்

1.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-1
2.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-2
3.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-3 
4.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-4

சிறகடிக்கும் நினைவலைகள் -பகுதி-5 படிக்க இங்கே சொடுக்கவும்.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தொடரும்......

திங்கள், 16 ஜூன், 2014

சிறகடிக்கும் நினைவலைகள்-4





உன் நினைவில் நெஞ்சுக்குழிகாய்கிறது.
உன் நினைவில் நான்தினம் தினம் சாகிறேன்
செம் மண்சாலையில்   தென் மேற்கு பருவக்காற்று
திசை மாறி சுழண்டு சுழண்டு  வீசுகையில்
நீ நிழலுக்காக பிடித்து வந்த குடையை.
காற்றுத்திருடன்  பிறை சூடி  ஓடுகையில்
அவன் தாவி தாவி என்னிடமே  கொண்டுவந்தான்
முன்பே காற்றுத் திருடனே அறிந்து விட்டான்
இவளின் காதலன் இவன்தான் என்று.
குடையை எடுத்து வந்து உன்னிடம் தந்த நினைவுகள்.


முதல்நாள் பார்த்துப் பேசிய போது.
காற்றின் காதலி நாணல் புல்
சாய்ந்து  நிலமகளை பார்ப்பது போல
உன் முகமும் கால்ப்பெரு விரலும்
நிலமகளின் மேனியின் மேல்
நீ வரைந்த  கோடும் எனக்கு கீறல் சித்திரமாய் இருந்தது.
நீ சென்ற பின் அந் சித்திரத்தில்
மூன்று இலக்கம் இருந்தது.


அது என்னவென்று பார்த்தால்.
ஒன்று .நான்கு.மூன்று (1.4.3)என்ற இலக்கம் இருந்தது
அப்போதுதான் நானறிந்தேன்
என்  காதலியே நம் காதலுக்கு
பச்சைக்கொடி காட்டிவிட்டாய்.
அந்த நாளும் அந்த நேரமும் ஆண்டும்
தனிமைப் பொழுதில்
ஒருகனம் மீட்டுப்பார்க்க சொல்லுகிறது.
அடுத்த  தொடர் விரைவில்.............

 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 



செவ்வாய், 10 ஜூன், 2014

சிறகடிக்கும் நினைவலைகள்-3

சிறகடிக்கும் நினைவலைகள் என்ற தொடர்பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்
சிறகடிக்கும் நினைவலைகள் -1
சிறகடிக்கும் நினைவலைகள்-2 

வண்ணக்கோலங்கள் வாசலில் போடும் போது
வானவெளி பார்க்கும்மென்று
மழை பொழியும் கரு மேகம்
இருளாக பந்திலிட
பகலவனே ஒளிந்திடுவான்.
துணையாக நீ விரும்பும்
உன் காதலனே கருமேக இருளிலே
உனக்காக காத்திருந்தான்.

அந்தி நேரத்தில் யாருமற்ற வேளையில்
பொழுதுறங்கும் நேரத்திலே
புன்னகை பூத்தாயே.
இருளிலே உன் பல்லின் வெண்மையது
பளிச்சிடும் ஒளியாக மின்னியது.
நிரல் கொண்ட யானைகள் போல.
பனைமரத்தின் காதலி ஆலமர விழுதே
பின்னிப்பினைந்த மரத்தின் கீழ்
ஆயிரம் வார்த்தைகள் பேசினோம்
யாருமே அறியவில்லை.
அந்த பனைமரமும் ஆலமரமும்
நம் காதலுக்கு சாட்சியாக இருக்கிறது.

உன் நினைவு என் நெஞ்சில்
ஊஞ்சல் ஆடுகிறது என்பதை
என் கையடக்க தொலைபேசியில்
நீ அனுப்பும் குறுஞ்செய்தி.
தினம் தினம் என் in box ஐ நிரப்புகிறது
அதை அழிக்கும் போது
உன் உள்ளத்தில் இருக்கும் என் நினைவை
அழிப்பது போல உணர்வுவருகிறது…

தொடரும்…..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 5 ஜூன், 2014

சிறகடிக்கும் நினைவலைகள் -2

சிறகடிக்கும்நினைவலைகள் என்றதலைப்பில்
தொடர் பதிவுகள்தொடர்கின்றன.
பகுதிஒன்றைப்படிக்க இங்கேசொடுக்கவும்
 
 



அந்தமான் காதலியே
எந்தன்ஆருயிர்காதலியே
யாரின்வயிற்றில்நீபிறந்தாய்
இன்றுஎன்தோளில் சாய்கிறாய்
மன்னவளேஎன்காதலியே
உந்தன்நினைவுதான்
என்னைநிமிடத்துக்குநிமிடம்
வடம்பிடிக்கிறது
 
மெல்லத்திறந்தவாயினால்
மின்னல்வெட்டும்உன்சிரிப்பு
என்னைதினம்தினம்காவுகொள்ளுதடி
துள்ளிவிளையாடும்புள்ளிமானின்
அழகைவிடஎன்மனதுக்குநீதான்அழகியடி
முதல்நாளில்முதல்நிமிடத்தில்
ஒற்றையடிபாதையில் நீ தண்ணீக்கலசம்
சுமந்துபோகும்வேலையில்

யாரும்மற்றவேளையில்
வான்மேகம்கண்ணீர்வடிக்கையில்
பறவைகளும்தவளைகளும்
இன்னிசைகச்சேரி செய்ய
உன்னிடத்தில்முதல் தடவைபேசிய
வார்த்தைகள்என்னவென்றுஉனக்குதெரியுமா?
நீமறந்தாலும்நான்மறக்கவில்லை
ஏதோஎழுதுவதற்காகஎன்தினக்குறிப்பேட்டை
திறந்தபோதுஅந்தமந்திரச்சொல்வந்தது...
அதுதான் சீய்....போங்க  சீய்…..போங்க
என்றவார்த்தைசொல்லும்போது
மௌனத்தில்வெற்கிதலைகுனிந்தாய்...
 
தொடரும்.............
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

திங்கள், 2 ஜூன், 2014

தடைகளை தாண்டிய வெற்றிப்படிகள்

 
தைப்பொங்கலை முன்னிட்டு ரூபன்&பாண்டியன் நடத்திய சிறப்புக்கட்டுரைப்போட்டியில் வலையுலகில் சாதனை படைத்த படைப்பாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் முதலில்.அத்தோடு படைப்புகளை அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றிகள்பல.
பரிசுப்பொருட்கள்:-சான்றிதழ்&பதக்கம் அனுப்பட்டுள்ளது சிலநாட்களில் வந்தடையும் என்பதை மிக மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன் 
 
 
 
 
 
 
 
 
வலையுலகம் பரந்து வரிந்த நீலக்கடல் போன்றது அதில் தங்களின் சிந்தனை ஆற்றலில் மலர்ந்த வார்த்தைகள் எல்லாம் ஒன்றாக சேர்த்து பல கட்டுரைகளை உருவாக்கியது வந்த படைப்புகளில் எல்லாம் நன்றாகவே இருந்தது இருந்தும் மிக திறமையான கட்டுரைகளை மிகவும் திறமை மிக்க நடுவர்கள் கொண்டு இனங்காணப்பட்டது.
நடுவர்களாக கடமையாற்றிய -

கவிஞர் -திரு.நா.முத்து நிலவன் ஐயா)
கவிஞர் -திரு.இரா.செல்லப்பா ஐயா.
கவிஞர்- திரு.ரமணி ஐயா
கவிஞர்-திரு.குவைத் வித்யாசாகர்(அண்ணா)

ஆகிய நான்கு நடுவர்களிடமும் நான் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு நடுவராக இருக்கவேண்டும் என்று சொல்லியபோது மனம் தளராமல் நாங்கள் சிறப்பாகசெய்வோம் என்று சொன்னார்கள் அவர்களுக்கு நான் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்….
போட்டி சம்மந்தமாக திரு. பாண்டியன் சகோதரன் அவர்களிடம் சொல்லியபோது. நாம் இருவரும் இணைந்து செய்வோம் என்று சொன்னார்அவர்கள் ஒத்துழைப்பு நல்கியமைக்கு எனது நன்றிகள்….
திரு தனபாலன் (அண்ணா)அவர்கள் இடமும் சொல்லியது போது…..செய்வோம் என்று பதில் சொன்னார் வரும் கட்டுரைகளை நடுவர்களுக்கு சிறப்பாக தொகுத்துஅனுப்பும் பணியை செய்தார்அத்தோடு இன்னும் எனக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு நல்கி வரும் தனபாலன்(அண்ணாவுக்கு )எனது நன்றிகள் பல….
வலையுலக நண்பர்களே மீண்டும் அடுத்த போட்டிக்கு தயாராக இருங்கள்….அடுத்த போட்டியில் சந்திப்போம்.
வெற்றி பெற்ற படைப்பாளிகள் கட்டுரைகளை கீழ்காணப்படும் இணைப்பில் சொடுக்கி படிக்கவும்

1.திரு.ஈ.சீ. சேஷாத்ரி
கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2.திருமதி.இனியா
கட்டுரைத் தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3.கீதமஞ்சரி
கட்டுரைத் தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏழு ஆறுதல் பரிசுகள்: சான்றிதழ்கள் பெறுபவர்கள் விவரம்:

* Karthikeyan L
கட்டுரைத் தலைப்பு : உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*Dineshsanth S
கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*PSD PRASAD
கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*கிரேஸ்
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*yarlpavanan
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*கோவை.மு.சரளா
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*Chokkan Subramanian
கட்டுரைத் தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-



 

 




-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 22 மே, 2014

சிறகடிக்கும் நினைவலைகள்


என்ற கவிதையை முழுவடிவமாக  படிக்கதலைப்பில் சொடுக்கவும்......

 

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-

சனி, 10 மே, 2014

அன்று ஒருநாள்



அன்று ஒரு நாள்

என்ற கவிதையின்முழு விபரத்தை படிக்க தலைப்பில் சொடுக்கவும்.....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-