புதன், 19 ஆகஸ்ட், 2015

தவிப்பு..


9-08-2015 அன்று மலேசியாவின் முதன்மை நாள் ஏடு மக்கள் ஓசை பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணல்.. இதோ பார்வைக்கு.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





புன்னகை வதனத்தில் பூப்போல மின்னும்
     பாவையே நீ பார்க்கும் மாயம் என்ன!!
மலர்ந்த புதுவெள்ளம் நீ மாயமானதேன்.
       முப்பகலாய் நானிருந்து.மும் முறையும்

 
வற்றாத உப்பூ நீர் உன் வதனமெல்லாம்
     ஒற்றனமாய் ஒற்றுதடி உன் முகத்தில்.
பாசத்தின் சோதியாய் பிரகாசிக்கும்  ஒளியே!
     பாவிநான் பிரிந்து பரதேசி அலைகிறேன்.

 
சொந்த மொழி சொல்லிடுவாய் சுகமாக.
     சோகங்களும் இறங்கிடுமே சுமையாக.
அல்லும்பகலும் விழித்திருக்கேன் அன்புக்கு.
   இமைகளை மூடி இருக்கிறேன் சிலநேரம்.
வழியோரம் உன் உதடுகளால்
  புன்னகை குவியல் ஒற்றிடுவாய்!...
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

எப்போது நீ வருவாய்





















மல்லிகை சூடிய மாதவம் மங்கையே.
         மன்னவன் வந்தான் காண.
புன்னகை பூத்தவள் பூவிளம் சிரிப்பிலே.
            புது செந்தமிழ் பாடி

கவிதையை எழுதிட கற்சிலை தேவையில்லை.
          கற்பக தரு விருட்சமாய்.
கண்ணறை நெஞ்சறை தினம் காணேன்.
           கார்த்திகை பூக்களில் நீ ஒன்ரே.

கண்ணின் மணியே கார்கால இரவே.
            கண்ணிமைக்கு இடமெல்லாம் ஒளியே.
மார்கழி மாதத்து சிதறல் பனியே.
               மும்மாறி சீராக பொழிகிறாய்.

என்னவளே. மன்னவளே மதிமயங்கும் நேரத்திலே.
            என்னவளைக் கரம் பற்ற
எப்போது நீ வருவாய் -உந்தன்
       எழில் அழகை காண காத்திருக்கேன்.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 5 ஆகஸ்ட், 2015

தமிழன் முகவரி இழந்தோம்.....


பாரத தேசத்தின் சோக நாள்.
புன்னகை தவழ்ந்த வதனம்.
தமிழன் என்ற அடை மொழிக்கு.
அடையாளம் தந்த முகவரி.நீ அல்லவா?

இன்று எம்மை விட்டு பிரிந்த துயரம்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது-போல.
உலககெங்கும் வாழும் 
தமிழன் முகவரி -இழந்த நாள்.

ஆறாத  துயரங்கள் 
அலையலையாய் அடிக்கிறது.
கண்ணீர்க் கடலும் 
அலையலையாய் ஓடுகிறது.

வீதி எங்கும் ஊர்ரெங்கும்
 சோகக் கீதங்கள் இசைக்க.
பட்டொலி வீசும் தேசிய கொடிகள் 
அரைக்கம்பத்தில்

ஆடி ஆடி துக்கத்தை சொல்லுகிறது.
ஏழையின் வயிற்றில் பிறந்த. மகன்
ஏழையின் தோள் நின்று துன்பத்தை அறிந்தவன்.
துயரங்கள் துரத்தி வர  நெஞ்சசை நிறுத்தி

வெற்றி மேடை ஏறிய வெற்றித் திலகம்.
உன்னை இழந்த துன்பத்தால் வாடுகிறோம்.
பொன் மொழி வித்தகா.! உன் பூவுடல் 
சந்தன பேழையில் 

சரித்திரம் சொல் அடைக்கப்பட்டது.
நீ மடிய வில்லை.   நீ விதைக்கப்பட்டுள்ளாய் 
நீ ஏழைகளின் நெஞ்சில்.குடியிருக்காய்.
ஏழ்மை வாழ்வை கற்றுக் கொடுத்ததும் நீதான்.

ஏணியில் உயர வைத்ததும் நீதான்.
நீ மறைந்தாலும் நீ விட்டுச்சென்ற தடயங்கள்.
உன் ஞாப நினைவை தினம் தினம் 
வீசிக் கொண்டே இருக்கும்.


2-08-2015.மலேசியாவில் உள்ள தேசிய நாள் ஏடு ( தமிழ் மலரில் வெளிவந்த கவிதை. இது. 

9-08-2015 இல் ஞாயிறு அன்று தேசிய நாள் ஏடு மக்கள் ஓசையில் எனது நேர்காணல் வருகிறது அதையும் விரைவில் தருகிறேன் பார்வைக்காக.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 23 ஜூலை, 2015

பொறாமை


மனிதவாழ்வியல் தந்துத்தில்
மரணப் படுக்கை வரை.
நினைவோடு நெஞ்சோடு
முட்டி மோதி விளையாடும்
கடலலைபோல் 
பொறாமைஎன்னும் ஆணிவேர்
குற்றுயிராய் கிடக்கும் போது.
பிறர் கண்டு சீற்றம் அடிக்கிறது.

மனிதன் இடத்தில் இருந்தா.?,
பறவையிடத்தில் இருந்தா....?
விலங்கிடம் இருந்தா...?
பொறாமை பிறந்தது.

குயிலுக்கும் காக்கைக்கும் பகை.
பாம்புக்கும் கீரிக்கும் பகை.
மனிதன் மனிதனுக்கு பகை.
மனிதன் எதில் இருந்து கற்றானோ.
தெரியாத புதிராக என் மனம்.
அலையடிக்கும் தாமரை போல.
நிமிடத்துக்கு நிமிடம் தத்தளிக்குது.

பொறாமை என்ற வன் சொல்லை.
ஆயுதமாக எடுத்து.
எத்தனை மனிதர்களின் வாழ்க்கை.
புயலடித்த தேசம் போல. சிதர் உண்டு கிடக்கிறது.
ஆழ்மனதில் புதையுண்டு கிடக்கும்
ஆணவச் சொல் பொறாமையை.
புதிய ஆடையை கண்டவுன்
பழைய ஆடையை களைவது போல.
போகியில் போடுங்கள். 
நல்ல மனிதராய் வாழுங்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

உறவுகளே.
 கவிஞர் வல்வை சுஜேன் அவர்களின் வலைப்பூ பக்கம் சென்று கவிகளை படித்து தங்களின் கருத்தை சொல்லுங்கள்...நிச்சயம் செல்லுங்கள்.

புதன், 15 ஜூலை, 2015

பொம்மையும் மனிதனும்


மனித வாழ்க்கை சக்கரத்தில்
எத்தனை விதமான பொம்மைகள்
துள்ளி விளையாடுகிறது.
சக மனிதனைப் போல சம அளவு
உரிமையோடு சுகமாக பேசுகிறது பொம்மைகள்
சிலரது வாழ்க்கை  தலையாட்டும்
பொம்மை போல காலமென்னும்
மகா சமுத்திரத்தில் நீச்சல் போடுகிறது.

பாலுக்கு அழும் குழந்தைக்கு  பால் கொடுக்காமல்
தலையாட்டும் துள்ளி விளையாடும் பொம்மைகள்.
உயிரின் மேல் உயிர் வைத்து விளையாடுகிறது.
பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் கேள்வி கேட்டால்
அந்த இடத்தில் ஆமாம் என்று
மாணவன் தலையாட்டும் பொம்மையாகிறான்
தாய் மொழி தெரிந்தும் பிற மொழி தெரியாவிட்டால்.
அந்த இடத்தில் கேட்கும் கேள்விக்கு 
தலையாட்டும் பொம்மையாகிறான்.இன்றைய மனிதன்.

உயிர் உள்ளவன் மனிதன். உயிர் அற்றது சடம்
அன்பு பாசம் . கருணை மனித நேயம்.
சொல்லும் சக்தி மனிதனே.
ஆனால் இன்றைய மனிதர்கள் தன் வாழ்நாளை
தலையாட்டும் பொம்மை போல வாழ்கிறார்கள்
விபரம் தெரிந்த காலம் வரை
இறக்கும் போது கூட நாம்  உயிரற்ற.
பொம்மையாக போகிறோம்....

பொம்மை கிடைக்காதெனத் தெரிந்தால்
குழந்தைப் பருவத்தில் நாம் அழுவதைப் போல
எல்லோரும் நம்மைப் பார்த்து
அழுது கொண்டிருப்பார்கள்
இனி இந்த பொம்மை கிடைக்காதென்று
இதுதான் மனிதனின் நிஜ வாழ்க்கையாக மாறுகிறது.
இறுதியில் மனிதனும் பொம்மையாக -மாறுகிறான் .

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 2 ஜூலை, 2015

சருகான வாழ்க்கை.


பாசம் வைத்த அன்பான உறவை பிரிந்து
பரதேசி வாழ்க்கையாக போனது பலர் –வாழ்வு
ஊட்டி வளர்த்த அன்புத் தங்கையும்
கூடி வாழ்ந்த உடன் பிறப்புக்களையும்
பணம் என்னும் காகிதத்துக்காக
வாழ்வை தொலைத்தவர்கள் எத்தனை
அம்மாவோ அப்பாவோ உடன் பிறப்புக்கள்
மண்ணின் மடியில் சங்கமித்தாலும்

இறுதியாய் முகம் கூடப்பார்க்க முடியாத
கண்ணீர் கரைந்த வாழ்க்கையாக
சதா துன்பச்சிலுவையை சுமந்து- வாழ்கிறார்கள்
பணம் என்னும் துயரம் துரத்தினால்
அடுத்தவன் வீட்டில் வட்டிக்கு பணம் –வேண்டி
விமானம் ஏறி வெளிநாடு போனவர்கள்.
நெஞ்சில் அணைத்து தூக்கிய
புன்னகை செல்வங்களின் நினைவுகள்.

பாசம் காட்டி அரவணைத்த மனைவியின்
அன்பு நெருடல் வாட்டி வதைக்க - சிந்தனை சிதற.
எல்லாம் பொறுமை காத்துக்கொண்டு.
கனவு தேசத்தில் மாய புன்னகையுடன்-வாழ்கிறார்கள்.
உடல் அங்கு இருக்க உயிர் மட்டும்
சொந்த தேசத்தில் நிழலாடுகிறது.
எல்லாம் பணம் என்னும் –காகிதத்துக்காக….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-