மனிதவாழ்வியல் தந்துவத்தில்
மரணப் படுக்கை வரை.
நினைவோடு நெஞ்சோடு
முட்டி மோதி விளையாடும்
கடலலைபோல்
பொறாமைஎன்னும் ஆணிவேர்
குற்றுயிராய் கிடக்கும் போது.
பிறர் கண்டு சீற்றம் அடிக்கிறது.
மனிதன் இடத்தில் இருந்தா.?,
பறவையிடத்தில் இருந்தா....?
விலங்கிடம் இருந்தா...?
பொறாமை பிறந்தது.
குயிலுக்கும் காக்கைக்கும் பகை.
பாம்புக்கும் கீரிக்கும் பகை.
மனிதன் மனிதனுக்கு பகை.
மனிதன் எதில் இருந்து கற்றானோ.
தெரியாத புதிராக என் மனம்.
அலையடிக்கும் தாமரை போல.
நிமிடத்துக்கு நிமிடம் தத்தளிக்குது.
பொறாமை என்ற வன் சொல்லை.
ஆயுதமாக எடுத்து.
எத்தனை மனிதர்களின் வாழ்க்கை.
புயலடித்த தேசம் போல. சிதர் உண்டு கிடக்கிறது.
ஆழ்மனதில் புதையுண்டு கிடக்கும்
ஆணவச் சொல் பொறாமையை.
புதிய ஆடையை கண்டவுன்
பழைய ஆடையை களைவது போல.
போகியில் போடுங்கள்.
நல்ல மனிதராய் வாழுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உறவுகளே.
கவிஞர் வல்வை சுஜேன் அவர்களின் வலைப்பூ பக்கம் சென்று கவிகளை படித்து தங்களின் கருத்தை சொல்லுங்கள்...நிச்சயம் செல்லுங்கள்.