விருதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

உரிமையைத் தேடி


ஈழ தேசத்தில் தமிழனின்
அபயக்குரல் வீதி எங்கும் ஒலிக்கிறது.
உயிரை இழந்தோம் உடமை இழந்தோம்
உறவை இழந்தோம் சொந்தம் இழந்தோம்
வாழும் மண்னை இழந்தோம்.


சொந்த காணி நிலம் வேண்டி
தாயக உறவுகள் தயங்காமல்
போர்க்கொடி ஏந்தி வெற்றிக் கொடி நாட்ட
தமிழினம் வீதி வலம் வருகிறான்
பதாதைகள் தாங்கிய கலர் எழுத்துக்களில்

துயரங்கள் துரத்தி வந்தாலும்
கொட்டும் வெயிலிலும் பிஞ்சுக்குழந்தைகளை
மடிஏந்தி வாழ இடம் தேடும் எம் உறவுகள்
நல்லாட்சி நாயகனின் செவிப்பறை
கிழியும் வரை ஊர்ரெங்கும் உரிமைக்குரல்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும்
மக்கள் பலத்தில் வென்ற மக்கள்
நாயகன் எங்கே?
அவர்களின் காதுக்கு கேட்க வில்லையா.
துயரங்கள் தீர துரிதமாய் புறப்படும்.நாயகா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 26 நவம்பர், 2015

விருது கிடைத்த போது.. மனம் மகிழ்வு….

இலங்கையின் தலை நகர் கொழும்பில் உள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில் தடாகம் அமைப்பினால் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது 21-11-2015 அன்று  இந்த நிகழ்வில் எனக்காக கிடைத்த விருது கள் இரண்டு.

1வது விருது. கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு என் கவிதை தெரிவாகியமைக்காக.கவினெழி என்ற பட்டமும் சான்றிதழும்
 

2வது விருது.-கவியருவி என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப்பட்டது… இந்த காட்சிகள் அடங்கிய தொகுப்பு தங்களின் பார்வைக்காக. இதோ.
எனதுதம்பி என்சார்பாக கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் விருது பெற்ற போது.
 
 
அன்பு நன்பர் கவிஞர் ஈழ பாரதி  எனது தம்பி  கொழும்பில் சந்திந்த போது
 
கடந்த ஞாயிறு22-11-2015 மலேசியாவில் உள்ள தேசிய நாள் ஏடு. பத்திரிகை தமிழ் மலரில் வந்த எனது கவிதையும் இங்கே.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 19 ஆகஸ்ட், 2015

தவிப்பு..


9-08-2015 அன்று மலேசியாவின் முதன்மை நாள் ஏடு மக்கள் ஓசை பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணல்.. இதோ பார்வைக்கு.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





புன்னகை வதனத்தில் பூப்போல மின்னும்
     பாவையே நீ பார்க்கும் மாயம் என்ன!!
மலர்ந்த புதுவெள்ளம் நீ மாயமானதேன்.
       முப்பகலாய் நானிருந்து.மும் முறையும்

 
வற்றாத உப்பூ நீர் உன் வதனமெல்லாம்
     ஒற்றனமாய் ஒற்றுதடி உன் முகத்தில்.
பாசத்தின் சோதியாய் பிரகாசிக்கும்  ஒளியே!
     பாவிநான் பிரிந்து பரதேசி அலைகிறேன்.

 
சொந்த மொழி சொல்லிடுவாய் சுகமாக.
     சோகங்களும் இறங்கிடுமே சுமையாக.
அல்லும்பகலும் விழித்திருக்கேன் அன்புக்கு.
   இமைகளை மூடி இருக்கிறேன் சிலநேரம்.
வழியோரம் உன் உதடுகளால்
  புன்னகை குவியல் ஒற்றிடுவாய்!...
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 21 மே, 2015

வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015


வலைத்தளத்தில் பல வகைப்பட்ட பதிவுகளை எழுதிவரும் மதிப்புக்குரிய கவிஞர் திரு.ரமணி ஐயா இவருடைய வலைத்தளத்தில் பலவகையான கவிதைகள் உள்ளது ஒவ்வொரு கவிதையும்  படிக்கும் வாசகஉள்ளங்களை நல்வழிப்படுத்தும் வகையில் உள்ளவை. மற்றும் சமுக அவலங்களையும் தன்நம்பிகை ஊட்டும் வகையில்  கவிதையை மெருகேற்றி எழுதுவதில் வல்லவர்… இவரைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். வலையுலகில் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்னை பொறுத்த வரையில்.பல வகைப்பட்ட திறமைகளை கண்டு எமது கவிதைக்குழு சார்பாக

எழுத்துலகம் என்று நின்று விடாது தனது அரச வேலையில் ஓய்வு பெற்ற பின்பு லயன் கழகத்தில் முக்கிய பொறுப்பு மிக்கவர் இதன் வழி சமுதாயப்பனிகளை தினம் தினம் செய்து கொண்டு வருகிறார். இப்படியான பணிகளை செய்து வரும் ரமணி ஐயாவுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில்
                கவிஞர்.திரு.ச.ரமணி ஐயாவுக்கு
சிந்தனைச் சிற்பி
என்ற தலைபிட்ட.உயரிய

 
 

விருதை மலேசியாவின் தலை நகரான கோலாலம்பூரில் இலக்கிய சந்திப்பின் போது வழங்கி கௌரவித்தேன்.. ஐயாவுக்கு  எமது கவிதை குழு சார்பாக  வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணி ஐயாவை போல வலைத்தளத்தில் எழுதி மற்றும் மூன்று நூல்களை வெளியீடு கண்ட  மதிப்புக்குரிய பாசமிகு ஐயா. அவர்தான் கவிஞர் திரு. நா.முத்து நிலவன் ஐயா.

இவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். இந்துக்களின் பெருநாள் என்றால் இந்திய தொலைகாட்சியை திறந்தால் போது. நம் வீட்டுக்குள் வந்திடுவர் அதுதான் ஐயாவின் பட்டடி மன்ற பேச்சு.அத்தோடு நின்று விடாது ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சமுகத்தை நல்வழிப்டுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கட்டுரைகளை எழுதி வருகிறார் அன்று முதல் இன்வரையும்.


அத்தோடு நின்று விடாது தான் வாழும் ஊரில் எப்படிப்பட்ட சமுதாய பணிகள் நடை பெறுகிறதோ அங்கேயும் காண முடியும் மற்றவர்களுக்கு ஒரு வழி காட்டி என்றுதான் சொல்ல வேண்டும.எங்கு  நீதியின் குரல் நசுக்கப்படுகிறோதோ அவற்றை எல்லாம் தட்டிக்கேட்கும் மனம் படைத்தவர் இப்படியாக கவிஞர் திரு. நா.முத்து நிலவன் ஐயாவை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்… தனது அரச வேலை ஓய்வு பெற்ற பின்பும் தனது பணியை செம்மையாக தொடருகிறர்இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு

 கவிஞர்.திரு.நா.முத்து நிலவன் ஐயாவுக்கு

(தமிழ் மா மணி )என்ற உயரிய
விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது…
 
மலேசியாவின் புகழ்பெற்ற முருகன் கோவில் முன்பாக முது்து நிலவன் ஐயாவுடன்  நிற்பவர், நகைச்சுவைத் தென்றல் திரு லியோனி அவர்களின் குழுவில் வந்த இனிய நண்பர் திரு. கோவை தனபால். அவர்கள்
எழுத்துலகில் வெற்றி நடை போடும் இரு ஜம்பவான்கள் இருவருக்கும் எமது கவிதை குழுவின் சார்பாக  உயரிய விருதை வழங்கி கௌரவப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்….
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....










வணக்கம்

வலையுலக உறவுகளே....
மனதுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுடன் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியாகஉள்ளது. என்ன விடயம் என்றால்...
திரு.கரந்தை ஜெயக்குமார் ஐயா  அவர்களும்
திருமதி விஜயா அம்மா அவர்களும் எனக்கு இன்முகத்துடன் விருது வழங்கியுள்ளார்கள்... அவர்கள் இருவருக்கும் எனது சிரம் தாழ்ந்தநன்றிகள் பல....

நான் பலருக்கு விருது வழங்கியுளேன் வழங்கி கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு முதலில் விருதை வழங்கியவர் கரந்தை ஜெயக்குமார் ஐயாதான்
இரண்டாவது விருதை வழங்கியவர் -திருமதி. விஜயா அம்மா.
(பெயரில் சொடுக்கவும்)
இருவரும் தந்த விருதை நான் சில பதிவர்களுக்கு பகிர்கிறேன்... இதோ எடுத்துக்கொள்ளுங்கள்.
என்னைப்பற்றி

எனது தாயகம் இலங்கை. இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். தாயகத்தில் வெடியோசை கேட்டு கேட்டு படிப்பை தொடர்ந்தவன்.. சொல்லப் போனால் அவலவாழ்கை என்றுதான் சொல்ல வேண்டும் பலதுன்பங்களை சுமந்தவன்..

ஆசைக்கு அம்மா. அப்பா. என்னுடன் சேர்ந்து 8 உடன் பிறப்புக்கள் அதில் மூத்த பிள்ளை நான்.. 6 ஆண் சகோதரங்கள் 1 பெண் சகோதரி.. சொல்லுவார்கள் ஏழு அண்ணனுக்கு இளைய தங்கச்சி என்று சொல்லும் பழமொழிக்கு எங்கள் குடும்பம் அமையப் பெற்றது.

2001ம் ஆண்டு உயர்தரப்பரீட்சை தித்தியடைந்து. அதன் பின்பு. பட்டப்படிப்பை தொடந்தேன் 1.1/2வருடங்கள் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் என்னை மட்டுமல்ல பலரது வாழ்க்கையை சிதைத்தது..அதன் பின் வட இலங்கை சங்கீத சபையில் கர்நாடக சங்கீதம் படித்தேன்.. அதனை தரம் 6வரை படித்தேன்.. அதில் பல பரீட்சைகள் தாண்டி சித்தியடைந்தேன். அதன் பின்பு 2005.இன் கடைப்பகுதியில் நியமனம் கிடைத்து சங்கீத ஆசிரியராக பாடசாலையில் கடமையாற்றினேன்.

அதன் பின்பு. 2006 உடை உறையுள் எல்லாம் .இழந்து இடம் பெயர்ந்து. வேறு மாவட்டத்தில் 2 வருங்கள் வாழ்ந்தோம்... இப்போது பிறந்தஊரில் வாழ்கிறார்கள் எம் உறவுகள்... நான் வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று தாயகம் கடந்தேன் இப்போதும் தாயகம் கடந்த வாழ்க்கைதான் வாழ்கிறேன்.
தற்போதுஒரு கம்பனியில். Safety Health & Environment 
பதவியில் உள்ளேன்


 ஒரு நபருக்கு இரண்டு விருதுகள் என்ற அடிப்படையில் பகிர்ந்துள்ளேன் அன்பாக எடுத்துக்கொள்ளுங்கள்

1.-திருமதி. கோமதி (அம்மா)  -திருமதி பக்கங்கள்.
2.திருமதி. இனியா(அம்மா)    -காவியக்கவி
3.திரு .ஜோசப் விஜி                 -ஊமைக்கனவுகள்
4.திரு.ஜீவலிங்கம்                    -யாழ்பாவாணன்
5.கவிஞர் இரமணி ஐயா         -தீதும் நன்றும் பிறர் தர வாரா
6.கே.பி.ஜனா                           -கே.பி .ஜனா
7.டொக்டர் திரு. முருகானந்தன்
8.கவியாழி                              -கவியாழி
9.திருமதி.                     உமையாள்.காயத்ரி
10.துளசி ஸ்ரீனிவாஸ்              -மயிலிறகு
11.திரு.கோ.புண்ணியவான்



-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-