வியாழன், 15 அக்டோபர், 2015

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெரும் கவிதைப் போட்டி-2015



 






















ற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால்  நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் 
போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள்


கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-31-10-2015
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்

மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள் போட்டியின் நெறிமுறைகள்



1.கொடுக்கப்பட்டுள்ள நாணயத்தை தோ்வு செய்து அதற்கான 15வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)



2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி ootru2@gmail.com
நடுவர்கள்
1.கவிஞர்-ரமணி ஐயா -இந்தியா
2.வலைச்சித்தர்.திரு.தனபாலன்- இந்தியா
3.திரு.யாழ்பாவாணன்-இலங்கை.
4.கவிஞர் .ரூபன்-மலேசியா

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக 
அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு 
தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய 

-நன்றி-
-அன்புடன்-
 -ரூபன்-

வியாழன், 8 அக்டோபர், 2015

வே. வேதிகாவின் ..கண்ணாடிப்பூக்கள் கவிதைத் தொகுதியின் விமர்சனம்..


வே. வேதிகாவின்  ..கண்ணாடிப்பூக்கள் கவிதைத் தொகுதியின் விமர்சனம்..
 

விமர்சனத்தில் சந்திப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
கவிதாயினி பிரபாகரன் வேதிகா தனது  மனதில் இளையோடியுள்ள எண்ணக்கீறல்களை மிகவும் அழகாக  மாலை தொடுத்து கவியாக தந்துள்ளார் நீங்கள் நினைக்கலாம்  வேதிகா பெரியவர் என்று இல்லை இளம் வயது உயர்தரப்பரீட்சைக்கு படிக்கும் காலத்தில் இந்த கவிதை தொகுப்பு வெளிவந்தது.- 25-5-2015

தமிழை வளர்க்க வேண்டும் என்ற துணிவுடனும் தனது சிந்தனை திறனை வளர்க்க வேண்டும் என்ற உணர்வுடன்  பல படைப்புக்களை பத்திரிகைகளிலும் மின் இதழ்களிலும் படைத்துக்கொண்டு வரும் இளம் படைப்பாளி என்றுதான் சொல்ல முடியும்.

அதுவும் ஈழத்தில் பிறந்து வளர்ந்து குருதி துவைந்த நிலத்தில் பிறந்த மங்கை அல்லவா.  அதுதான் வன்னி மண்ணில்.. பிறந்த அறிவு மங்கை. இனி புத்தகம் பற்றி நாம் நோக்கினால்.

தனது  கண்ணாடிப்பூக்கள் என்ற கவிதை நூலில் எல்லாமாக 52 கவிதைகள் 64 பக்கங்கள் கொண்டு பிரசவம் கண்டுள்ளது. அழகிய அட்டைப்படத்துடன் மிளிர்கிறது.

தனது முதலாவது கவிதையில் தான் பிறந்து வளர்ந்த ஊர்பற்றிமிக அற்புதமாக அவையடக்கமாக சொல்லியுள்ளார்  கவிதை படிக்கும் போது என் மனதை அந்த ஊர்ப்பக்கம் ஈர்த்து விட்டது.. அதனால்தான் அந்த ஊரில் உள்ள கவிஞர்கள் எழுத்தாளர்களை பார்க்க வேண்டும்  என்னும் ஆசை பிறக்கிறது. அந்த வகையில் தனது ஊர்பற்றி சொல்லிய வரிகளை நாம் நோக்கினால்.

தூங்கும் பனித்துளிகளை
கிள்ளியெழுப்ப வெட்கப்படுவான்
கிழக்கு வானின் சூரியன்
பொங்கும் இன்பமே எங்கும்….

இந்த வரிகளை படிக்கும் போது எப்படிப்பட்ட ஊர் என்பதை புரிந்துகொள்லலாம்  நாம்.

உதிர்ந்த இறகுகளாக. என்ற தலைப்பில் எழுதிய கவிதையை படித்த போது. எத்தனை இளம் பிஞ்சுகள் எத்தனை உறவுகள் சொந்தங்களையும் பெற்ற சொந்தங்களையும் இழந்து தவிக்கின்றார்கள் ஈழத்தின் யுத்தத்தால்.


எத்தனையோ உறவுகள் வசதி வாய்ப்புடன் வாழ்கிறார்கள் அவர்களுக்காவது நாங்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற உணர்வை அற்புதமாக பறைசாற்றியுள்ளார் அதில் எடுத்தியம்பிய வரியாக.
உதிர்ந்த இறகுகளோடு
உதிரம் வடிக்கும்
உறவுக்காய் எங்கள்
இதயக் கதவுகளை.
இனிமையோடு திறப்போம்
இந்த வரிகளை படிக்கும் ஒவ்வொரு  உள்ளங்களும் நிச்சயம் இதயக்கதவுகளை திறக்கும் என்பதில் ஐயமில்லை. உணர்ச்சி மிக்க வரிகளாக சொல்லியுள்ளார்
அது மட்டுமா வயது முதிந்த முதியோர்கள் பற்றியும் சின்னக் கீறுக்கலாக எடுத்துக்காட்டிய விதம் என்னை ஒரு தடவை சிந்திக்க வைத்தது. அந்த  வலி மிக்க வரிதான் இங்கு
நன்றியுள்ள ஜீவன்-உன்னை
ஊட்டி வளர்க்கும் அன்னைக்காய்
ஆட்டி வைப்பாய் வாலை-ஆனால்
ஆக்கிவைத்தார் முதியோர் இல்லங்கள்.
.இந்த வரிகளின் கருத்தை நாம் ஒரு தடவை என்ன பல தடவை சிந்திக்க வைக்கிறது. 
சொல்வார்கள் பெண்கள் மலர் போன்றது உதிர்ந்தால் உதிர்ந்ததுதான்.இப்படிப்பட்ட பெண்களின் வாழ்வில் காம பசி கொண்ட காம வெறியர்களின் கைவரிசை பற்றி  தினசரிப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பெண்களின் வண்கொடுமை பற்றி செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது.  அந்த உணர்வை வெளிப்படுத்தும் கவிதைதான்  மலர்களின் ஏக்கம் என்ற தலைப்பில் உள்ள கவிதை அதுவும் பெண் எப்படிப்பட்டவள் என்றதை சொல்லி விட்டு  இறுதில் அவள் காமபிசாசுகளின் கையில் அகப்பட்டு இறக்கிறாள்  அவளின் துயரத்தை சொல்லும் வரிகள்படிப்பவர்களை  விக்கவைக்கும்.
நீ நடந்து செல்லும் போது.
பாதங்களும் பஞ்சாகவென்றே.
பூத்திருக்கின்றன பூக்கள்.
ஆனால் நீ காமப் பிசாசுகளின்
கையில் அகப்பட்டு இறுதி கிரியையில்
கண்ணீர் சொரிய வைத்தாய்அவைகளை.
அது மட்டுமா. காதல் கவிதை  எழுதாத கவிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம் அதில் வேதிகா விதி விலக்கா. 
வருவாயா என்ற தலைப்பில் உள்ள கவிதையை படித்த போது. காதல் இரசம் சொட்டுகிறது.
மடிந்து போன மாயக் கனவுகளோடும்
மறக்கதுடிக்கும் வடுக்களோடும்
மறைந்து போன மனச் சிரிப்பில்
மன்னவனே உன் முகம் மட்டும்
புன்னகையுன் என்முன்னே.
பூத்தது போல உணர்ந்தேன்.
உன்  புதிரான புன்னகை கண்டு
என் இதயத்தில் பலஅர்த்தங்கள் தேடி
தோற்றுப் போய் இருக்கிறேன்.
தேற்ற வருவாயா..
இந்த வரிகளில் காதல் ஏக்கத்தை பிரிவை துள்ளியமாக இரனையுடன் அற்புதமாக சொல்லி யுள்ளார்.
சமூகத்தை நல்வழிப்படுத்தும் கருத்துக்கள் நிறைந்த கவிதைகளும்.எழுதியுள்ளார்.  படிப்பவர்களை ஒரு கணம் சிந்திக்கவைக்கிறது…
எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம் தனது கண்ணாடிப்பூக்கள் என்ற கவிதை நூலில் உள்ளே பிரசவம் செய்த கவிதைகள் ஒவ்வொன்றும் படிப்பவர்களை நிச்சயம் கவரும் என்பதில் ஐயமில்லை…..
பிரபாகரன் வேதிகா வளர்ந்து வரும் ஒரு படைப்பாளி.  தனது கன்னிக்கவிதை பிரசவத்தை நிச்சயம் வேண்டி படியுங்கள்.. நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் ஒவ்வொரு கவிதையிலும் சொல்லிய அர்த்தங்களை. இன்னும் பல நூல்கள் களம் கண்டு தன்னையும் எம்  தமிழ் மொழியையும்வளர்க்க உரமுட்டும் கவிதாயினி பிரபாகரன் வேதிகா அவர்களின் நூல்பற்றி  படித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். வாழ்க வளர்க…..
வாழட்டும் வையகம்
வளரட்டும் எம் தமிழ் மொழி.
நூலின் விலை – 158 /=ரூபாய்(இலங்கை)
அச்சுப்பதிப்பகம்-விஜய் அச்சுப்பதிப்பகம்-வவுனியா.இலங்கை.
தொடர்புக்கு-+94242225799/+94779009491
ISBN.-978-955-42298-0-8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெள்ளி, 2 அக்டோபர், 2015

நீ தந்த பிரியம்.


உறங்கும் விழிகள் எல்லாம்
உன்உருவம் தோன்றுதடி.
ஊர் உறங்கும் சாமத்தில்
உன் நினைவு வருகிறது.

 மழலை மொழி பேசி
அன்புதனை நீ காட்டி
அல்லல் பட வைத்தாயே.
தனிமையில் வாழ்கிறேன் .

 உந்தன் நினைவுகள் வரும்போது.
உன் விழிகள் இரண்டும்
கண்ணெதிரே. வந்தாட.
நீ காட்டிய பாசம் நின்றாட

பாசத்தின் சிறைக் கூட்டை
பண்போடு நீ சிதைத்தாய்.
பாசம் என்னும் பண்புக்கு
இலக்கணத்தில்
வரிவடிவம் தேடினேன்
நீ தந்த பிரியந்தான் வந்ததடி….

இந்த கவிதை மலேசியா பத்திரிகை தமிழ் மலரில் 27-09-2015 வந்தது.பார்வைக்கு




தமிழ்டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை.-09-09-2016




27-09-2015 மலேசிய பத்திரிகை மக்கள் ஓசையில் வந்த  செய்தி பார்வைக்கு




மலேசிய எழுத்தாளர் திருமதி மார்கிரேட் செல்லத்துரை ஐயாவின் வீட்டில் இரவு நேர விருந்தின் பின் அவர்கள் எழுதிய நூலை பெற்ற போது
 
 


வியாழன், 1 அக்டோபர், 2015

எனது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் வெளியீட்டு புகைப்படங்களின் தொகுப்புக்கள்.


 

 






















மலேசியத் தலை நகர் கோலாலம் பூரில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள்
மண்டபத்தில் எனது ஜன்னல் ஓரத்து நிலா என்னும் கவிதைப் புத்தகம் மிகச் சிறப்பாக வெளியீடு செய்ப்பட்டுள்ளது. இன் நிகழ்வை மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியும் இனியநந்தவனப்பதிப்பகமும் இணைந்து நடத்தியது.இன் நிகழ்வில் பெரு வாரியான  இலக்கிய வாதிகள் பங்கு பற்றி.


 
 























சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது. மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் பரத நாட்டிய நிகழ்வும் இடம் பெற்று நிகழ்வுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் நிகழ்வு இனிதே ஆரம்பிக்கப்பட்டது.
 

 எனது ஜன்னல் ஓரத்து நிலா என்ற கவிதை நூலை  கனடா உதயன் இதழியல் ஆசிரியர் ஆர் என். லோகேந்திரலிங்கம் அண்ணா வெளியிட முதல் நூலைமுனைவர் திரு. முரசு ராஜன் ஒரு தொகை பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார்.


அத்தோடு புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் முத்து ஐயாவும் நிகழ் வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்


 

 
























இந்த நிகழ்வில் எனக்கு கலைவேந்தர் என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப்பட்டது.விருது வழங்கிவைப்பவர் குவைத் நாட்டில் இருந்து வருகைதந்த தொழில் அதிபர் திரு.Dr.S.M.ஹைதர் அலி மற்றும் இனியநந்தவனம் பதிப்பக ஆசிரியர்

 
 






















அத்தோடு மலேசிய எழுத்தாளர் சங்க வெளியகத் தொடர்பாளர் திரு இராஜேந்திரன் ஐயா அவர்களால் பரிவட்டம் கட்டி மரியாதை செய்து நினைவுப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.








 
























அத்தோடு மலேசிய எழுத்தாளர் சங்க துணைத்தலைவர் பெருமால் மோகன் அவர்களால் போர்வை போர்த்து மரியாதை செய்யப்பட்டது..

 
 
























அத்தோடு மலேசியா விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ. சரவணன் அவர்கள் நிகழ்வுக்கு வந்த போது. நேரில் சந்தித்து பேசியபோது எடுத்த படம்
 

 




























அத்தோடு இன் நிகழ்வுக்கு.

1.தலைமைவகித்த

ஜேக்கப் சாமு வேல் (சிப்பாங் ..கா தொகுதித்தலைவர்)-மலேசியா

 
நிகழ்வுக்கு முன்நிலை வகித்தவர்-

இனியநந்தவனம் சந்திர சேகர்

 (புதிப்பக ஆசிரியர்)-இந்தியா

 

3.வாழ்த்துரை வழங்கியவர்கள்

திரு ஆர் என். லோகேந்திரலிங்கம்(கனடா உதயன் இதழியல் ஆசிரியர்.)

திரு K.P.சாமி (தேசிய ..கா. மத்திய செயலவை உறுப்பினர்-மலேசியா).

திரு. இராஜேந்திரன்.(மலேசிய எழுத்தாளர் சங்க வெளியகத் தொடர்பாளர்)

திரு.Dr.S.M.ஹைதர் அலி(தொழில் அதிபர்-குவைத்.)

திரு.முனைவர் வி. முத்து. புதுச்சேரி தமிழ்ச்சங்கத் தலைவர்.

இன் நிகழ்வை ஒருங்கினைப்பு செய்த திரு .ஆறுமுகம் செல்லத்துரை ஐயா அவர்களுக்கு. டெங்கில் கிளை இந்தியர் காங்கிரஸ் கட்சி தலைவர் முனியாண்டி கந்தசாமி ஐயாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..









 
 






















அத்தோடு சாதனையாளர்ருக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம் பெற்று அத்தோடு இரவுநேர உணவுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் நானே கடமை ஆற்றினேன்.விருது பெற்றோர் படங்களும்.அத்தோடு
காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழக துனைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா அவகளும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களும் கவிஞர் சு.பீர்முகமது ஐயாவும் எனது நூலை பெற்ற போது












 






 

 
 
 
 
























தீபாவத்திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி சம்மந்தமான பதிவை பார்வையிட இதோ
ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றம் என்ற வலைப்பூ பக்கம் செல்லுங்கள்.. உங்களின் படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவில் எனது புத்தகம் விற்பனைக்கு வருகிறது... என்பதை அறியத்தருகிறேன் மகிழ்ச்சியாக
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நாளை சந்திக்கிறேன்  பத்திரிகை செய்திகளுடன்...